states

ஆரம்ப சுகாதார நிலையங்களில் அறுவை சிகிச்சைகள் செய்யக் கூடாது

மதுரை, நவ.16-  தமிழகத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலை யங்களில் அறுவை சிகிச்சைகள் செய்ய அனு மதியளிப்பது தவறானது. அங்கு போதுமான வசதிகள் இல்லை என்று தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கத்தின் தலைவர் மருத்து வர் செந்தில் தெரிவித்தார். கால்பந்தாட்ட வீராங்கனை பிரியா, தவறான அறுவை சிகிச்சை காரணமாக சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் செவ்வாயன்று உயி ரிழந்தார். இந்நிலையில் தமிழ்நாடு அரசு மருத்து வர்கள் சங்கத்தின் தலைவர் மருத்துவர் செந்தில் தனியார் ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: எதிர்பாராத விதமாக செல்வி பிரியா  அறுவை சிகிச்சையின் போது இறந்துவிட்டார். இதுகுறித்து பல்வேறு தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன. இருந்தபோதும் மருத்து வர்கள் தரப்பில் விசாரணை மேற்கொண்டு வருகிறோம். இந்நிலையில் இதுபோன்ற ஒரு மருத்துவ இறப்பு நிகழ்ந்ததென்றால், அதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கலாம். எந்த ஒரு மருத்துவரும் உயிரிழப்பு நேர் வதை ஒருபோதும் விரும்பமாட்டார்கள். நல்ல  நோக்கத்தின் அடிப்படையில் சில ரிஸ்க் எடுக்கும்போது எதிர்பாராதவிதமாக இது போன்ற விபத்துகள் நேரலாம். சில நேரங்களில்  உயிரைக் காப்பாற்றுவதற்காக விதிமுறை களை மீறும்போது இறப்புகள் நேர வாய்ப் புண்டு.

இதுபோன்ற நெக்லிஜன்ஸ்கள் நேரும் போது, அதனை மருத்துவத் துறையில் இரண்டு  வகையாகப் பிரிக்கிறோம். ஒன்று கிரிமினல் நெக்லிஜன்ஸ், மற்றொன்று சிவில் நெக்லி ஜன்ஸ். இதில் மிக அரிதாகவே கிரிமினல் நெக்லிஜன்ஸ் நடைபெற வாய்ப்புண்டு. இதில் தான் காவல்துறை நடவடிக்கை மேற்கொள்ள முடியும். சிவில் நெக்லிஜன்ஸ் தொடர்பான விச யங்களில் துறை மற்றும் கவுன்சில் சார்ந்த நட வடிக்கை மேற்கொள்வது வழக்கம். பிரியா விவகாரத்தைப் பொறுத்தவரை பெரி யார் நகர் மருத்துவமனையில் நடைபெற்ற அறுவை சிகிச்சையின் போதோ அல்லது  மயக்க மருந்து கொடுக்கும்போதோ விபத்து  நேர்ந்திருக்கலாம். அவ்வாறு இல்லையெனில் அங்கிருந்து மாற்றம் செய்தபிறகு இதேபோன்ற தவறுகள் மூலமாக நடந்திருக்கலாம். ஆனால்,  எல்லாவற்றையும் முழுமையான மருத்துவ அறிக்கைக்குப் பிறகு தான் எங்கு தவறு நிகழ்ந்  தது என்பதை தெரிந்து கொள்ள முடியும். தற்போது தமிழக அரசு உடனடியாக நட வடிக்கை எடுத்துள்ளது. என்றாலும், சிகிச்சை யில் ஈடுபட்ட மருத்துவர்களுக்கு உரிய வாய்ப்பு அளிக்க வேண்டும். முதலில் பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் போதிய வசதிகள் இருந்த னவா? அல்லது வேறு ஏதேனும் ஒரு வகை யில் அந்த மருத்துவர்கள் நிர்ப்பந்திக்கப்பட் டார்களா..? சில உயரதிகாரிகள் காப்பீடு மற்றும் சாதிக்க வேண்டுமென்பதற்காகவும் இது போன்று நடைபெற்றதா?

குறிப்பாக ஆரம்ப சுகாதார நிலையங்களில் இதுபோன்ற அறுவை சிகிச்சைகள் மேற்  கொள்ளப்படுவது தேவையற்றது. சிக்கலான  அறுவை சிகிச்சைகளை அவர்களால் மேற் கொள்ள முடியாது. தற்போதும் தமிழகத்தில் 200 ஆரம்ப சுகாதார நிலையங்களில் அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இது போன்ற அறுவை சிகிச்சைகளுக்கு எண் ணிக்கை வரையறை செய்யப்பட்டு மேற்கொள்  ளப்படுகிறது. இது உயரதிகாரிகளின் தவறா கும். அதுபோன்று பிரியா விவகாரத்தில் நிகழ்ந்திருக்குமோ என விசாரணை மேற்  கொள்ள வேண்டும். அதனை மறைப்பதற்கு மருத்துவர்கள் பலியாடாக ஆக்கப்படுகிறார் களா என்பதை விசாரிப்பதும் அவசியம். இதுகுறித்து முறையான விசாரணை நடை பெற வேண்டும். அதில் ஏதேனும் தவறு  இருந்தால், சிவில் நெக்லிஜன்ஸ் இருந்தால்,  அவர்களுக்கு அந்த தவறுக்குரிய தண்டனை யை அரசு வழங்க வேண்டும். தற்போது பணி யிடை நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்கள். குறு கிய கால இடைவெளியில் முழு விசாரணை செய்திருக்க முடியாது. ஆகையால் ஆரம்ப கட்ட விசாரணையின் அடிப்படையில் இந்த நட வடிக்கையை தமிழக அரசு மேற்கொண்டுள் ளது. பொது மக்கள் மற்றும் சமூக அளவில் வரக்கூடிய அழுத்தங்களின் அடிப்படையில் யாரும் பலிகடா ஆக்கப்படக்கூடாது. இந்தி யாவைப் பொறுத்தவரை சட்டம் என்பது எல்  லோருக்கும் பொதுவானது. தவறு இருந்தால் நடவடிக்கை எடுக்கலாம். இதை தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கம் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது. விரிவான விசாரணைக்குழு அமைத்து இந்த விசயத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.