சென்னை,பிப்.15- தேர்தலின்போது அளித்த வாக்குறு திப்படி பணி நிரந்தரம் செய்யக்கோரி மின்வாரிய ஒப்பந்த ஊழியர்கள் வியாழனன்று (பிப்.16) தமிழ்நாடு முழு வதும் மறியலில் ஈடுபடுகிறார்கள். இதுகுறித்து தமிழ்நாடு மின்ஊழியர் மத்திய அமைப்பு மாநில பொதுச் செயலாளர் எஸ்.ராஜேந்திரன் வெளி யிட்டுள்ள அறிக்கை வருமாறு:- தமிழ்நாடு மின்வாரியத்தில் பல்லாயிரக்கணக்கான ஒப்பந்த ஊழி யர்கள் பணியாற்றி வருகிறார்கள். மின் உற்பத்தி, மின் விநியோகம், விரி வாக்க பணிகள், பொது கட்டுமான வட்டம் ஆகிய இடங்களில் பணி யாற்றி வருகின்றனர். கடந்த 10.8.2007 அன்று ஏற்பட்ட ஒப்ப ந்தத்தின் அடிப்படையில் ஒப்பந்த ஊழியர்கள் பணி நிரந்தரப்படுத் தப்பட்டனர். ஆனால் 25 ஆண்டுகள் கடந்த பின்னர் தொடர்ந்து பணியாற்றி வரும் ஒப்பந்த ஊழியர்களை அடை யாளங்கண்டு பணி நிரந்தரம் செய்ய மின்வாரிய நிர்வாகம் மறுத்து வரு கிறது. கஜா, தானே, ஒக்கி போன்ற புயல் மற்றும் சென்னை பெருவெள்ளம் போன்ற பேரிடர் காலங்களில் மின் விநி யோகத்தை சீரமைத்து குறுகிய காலத் தில் பணிகளை செய்து தடை யில்லா மின்சாரம் வழங்கி, ஆளும் அரசுகளுக்கு பெருமை சேர்த்த வர்கள். மழை, வெயில் என பாராமல் உற்பத்தி நிலையங்களில் எரியும் நிலக்கரியின் வெப்பத்திற்கு நடுவே பணியாற்றி மின்சாரத்தை உற்பத்தி செய்கின்ற பணியிலும், மனிதர்கள் நட மாட முடியாத மலை பிரதேசமான காடம் பாறை, குந்தா, கோதையாறு பாப நாசம் உள்ளிட்ட நீர்மின் உற்பத்தி வட்ட ங்களிலும் மின் தொடரமைப்பு மற்றும் பொதுக்கட்டுமான பகுதிகளிலும் பணி யாற்றி வருகின்றனர். அரசே மீறுவது நியாயமா?
தமிழ்நாடு அரசின் அரசாணை எண் 950 நாள் 8.8.1990-ன்படி மின் உற்பத்தி, பராமரிப்பு உள்ளிட்ட பகுதிகளில் ஒப்பந்த முறையை புகுத்தக்கூடாது என தெளிவாக குறிப்பிட்டுள்ளது. நிரந்தர தன்மை வாய்ந்த இந்தப் பணி இடங்க ளில் ஒப்பந்த ஊழியர்களை பணி யாற்ற வைக்கக்கூடாது என்று சட்டம் இயற்றிய ஆட்சியாளர்களே அந்த சட்டத்தை மீறுகிறார்கள். 1970 ஒப்பந்த முறை ஒழிப்பு மற்றும் ஒழுங்கு படுத்துதல் சட்டத்தை ஆட்சி யாளர்கள் மதிப்பதில்லை. திமுக தேர்தல் வாக்குறுதி பல கட்டங்களாக மறியல், உண்ணா நிலை என போராடிய தொழிலா ளிக்கு திமுக அரசின் தேர்தல் வாக்குறுதி யில் அரசின் பொதுத்துறை நிறுவனங் களில் 10 ஆண்டுகளுக்கு மேலாக பணி யாற்றும் ஒப்பந்த ஊழியர்களை பணி நிரந்தரம் செய்வோம் என்ற வாக்கு றுதி ஒப்பந்த ஊழியர்களை கவ்விப் பிடித்தது. ஆட்சியில் அமர்ந்து 20 மாதங்கள் கடந்த பின்னரும் கூட ஒப்பந்த ஊழியர்களை பணி நிரந்தரப் படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. திமுக அரசின் தேர்தல்கால வாக்கு றுதியை நிறைவேற்றக் கோரி மின்வாரியத்தில் பணியாற்றும் ஒப்பந்த ஊழியர்கள் அனைத்து வட்ட மேற் பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு மறியல் போராட்டத்தை நடத்த உள்ளனர். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.