மின் வாரியத்தின் ஆன்லைன் சேவைகள் பாதிப்பு
சென்னை,பிப்.15- புதிய மின் இணைப்புக்கான விண்ணப்பங்களை சமர்ப்பித்தல், மின் கட்டணம் செலுத்துதல் உள்ளிட்ட பல்வேறு வகையான சேவைகளை இணையதளம் மூலம் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகம் வழங்கி வருகிறது. இதன்படி இணைய தளம் மூலம் பொதுமக்கள் இந்த வசதிகளை பயன்படுத்திக் கொள்ள லாம். இந்நிலையில், ஆன்லைன் சேவை களில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக டான் ஜெட்கோ தெரிவித்துள்ளது. இது குறித்து ட்விட்டர் பக்கத்தில் டான் ஜெட்கோ வெளியிட்டுள்ள பதிவில், கோளாறு காரணமாக டான்ஜெட் கோவின் ஆன்லைன் சேவை கள் தற்போது பாதிக்கப்பட்டுள்ளன. சேவைகள் விரைவில் மீட்கப்படும். சிரமத்திற்கு வருந்துகிறோம்”என்று அதில் கூறப்பட்டுள்ளது. மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைக்க புதனன்று (பிப்.15) கடைசி நாள் என்று மின்வாரியம் அறி வித்துள்ள நிலையில் இந்த சேவை பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
ஸ்டேட் வங்கியின் கடன் வட்டி அதிகரிப்பு
சென்னை,பிப்.15- விலைவாசி உயர்வை கட்டுப் படுத்தும் வகையில் வங்கிகளுக்கு வழங்கும் குறுகிய கால கடன்களுக் கான வட்டியை ரிசர்வ் வங்கி சமீபத்தில் உயர்த்தியது. இதையடுத்து ஸ்டேட் வங்கி அனைத்து வகை கடன்களுக்கான வட்டியை 0.1 விழுக்காடு அதிகரிப் பதாக தெரிவித்துள்ளது. இதனால் தனி நபர் கடன், வீட்டுக்கடன், வாகன கடன் என பல்வேறு வகை கடன்களுக்கான வட்டி உயர்வு உடனடியாக அமலுக்கு வந்துள்ளது. குறைந்தபட்ச வட்டி விகி தம் 7.85 விழுக்காட்டிலிருந்து 7.95 விழுக் காடாக அதிகரித்துள்ளது. இதைத் தொடர்ந்து பிற வங்கிகளும் கடன் களுக்கான வட்டியை அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்திய குடிமக்களுக்கு மட்டுமே புதிய ரேசன் அட்டை
சென்னை, பிப்.15- சென்னை உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை ஆணையாளர் ராஜா ராமன் காணொலி காட்சி மூலம் மாவட்ட அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டம் நடத்தினார். அப்போது அவர் சில உத்தரவு களை பிறப்பித்தார். அதன் விபரம் வருமாறு:- நியாய விலைக்கடைகள் மூலம் வழங்கப்படும் வேட்டி, சேலைகள் பி.ஓ.எஸ். இயந்திரம் மூலம் மட்டுமே வழங்கப்பட வேண்டும். நியாய விலைக்கடைகளில் எக்காரணத்தை கொண்டும் இருப்பு வைத்துக்கொண்டு விநியோகிக்காமல் இருக்க கூடாது. ஆதாருடன் வங்கி கணக்கை இணைக்காத நபர்களை நேரிடையாக வங்கியில் சென்று இணைத்திட உரிய அறிவுரைகள் வட்ட வழங்கல் அலுவலர்கள் மூலம் வழங்கப்பட வேண்டும். தொடர்ந்து எந்த பொருட்களும் விநியோகம் செய்யாமல் கடை திறக்காமல் உள்ள நியாய விலைக்கடைகளை கண்காணித்து கடை திறந்து விநியோகம் செய்வதை உறுதி செய்ய வேண்டும். இந்திய குடிமகனாக இல்லாத எவருக்கும் புதிய குடும்ப அட்டை வழங்கக் கூடாது. நியாய விலைக்கடை விற்பனையாளர்கள் என்.எப்.எஸ்.ஏ. மற்றும் மாநில ஒதுக்கீடு குடும்ப அட்டைகளுக்கு தனித்தனியாக பில் போடுவதை உறுதிபடுத்திக் கொள்ள வேண்டும். ஒரே நபர் வெளிமாநிலங்களிலும், தமிழ்நாட்டிலும் குடும்ப அட்டை வைத்திருந்து பொருட்களை பெறும் நபர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டு அதிகாரிகளுக்கு மெயில் மூலம் அனுப்பப்பட்டுள்ளது. அதனை கள விசாரணை செய்து அறிக்கை அனுப்ப வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தமிழ் மொழியில் தேர்வு எழுதுவதில் சிறுபான்மை மாணவர்களுக்கு விலக்கு
சென்னை, பிப்.15- சிறுபான்மை பள்ளிகளில் அவரவர் தாய் மொழியில் மொழி பாடத்தேர்வு எழுதுவதற்கு அனுமதி அளித்து தேர்வுத்துறை அறிவித்துள்ளது. 10ம் வகுப்பு பொதுத்தேர்வில், சிறுபான்மை பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் தமிழ் மொழியில் தேர்வு எழுதுவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்ற உத்தரவை பின்பற்றி தேர்வு துறை இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக சிறுபான்மை சமூகத்தை சேர்ந்தவர்கள் மாநில அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.
ம.பி. சர்ச் எரிப்பு சம்பவங்களில் 3 பேர் கைது!
பாஜக ஆளும், மத்தியப் பிரதேச மாநிலம் நர்மதாபுரம் மாவட்டத்தில் உள்ள சவுக்கிபுரா பகுதியில் பிரசித்திபெற்ற தேவாலயம் அமைந்துள்ளது. இந்த தேவாலயம் கடந்த சனிக்கிழமையன்று இரவு தீ வைக்கப்பட்டதுடன், சுவர்களில் ‘ராம்’ என எழுதப்பட்டிருந்தது. இது தொடர்பாக, உ.பி. மாநிலம் அயோத்தியைச் சேர்ந்த அவ்னிஷ் பாண்டே (24), ஷிவராய், ஆகாஷ் திவாரி ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர்.
அதானி விவகாரம்: பிப்.17 விசாரணை
அதானி குழும நிறுவனங்கள், பல லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு மக்க ளின் பொதுப்பணத்தை மோசடி செய்திருப்பது தொடர்பாக எழுந்துள்ள குற்றச்சாட்டு குறித்து, உச்ச நீதிமன்றத்தின் நேரடி கண்காணிப்பில் விசா ரணை நடத்தப்பட வேண்டும் என்று காங்கிரஸ் மகளிர் பிரிவைச் சேர்ந்த டாக்டர் ஜெயா தாக்கூர் உச்ச நீதிமன்றத்தில், ரிட் மனு ஒன்றைத் தாக்கல் செய்தி ருந்தார். இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக ஏற்கெனவே இரண்டு வழக்குகள் இருப்பதால், அதோடு சேர்த்து இந்த வழக்கும் பிப்ரவரி 17-ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான உச்ச நீதிமன்ற அமர்வு அறிவித்துள்ளது.
‘பிரதமர் பதிலளிக்காதது கோழைத்தனம்’
“பிப்ரவரி 7 அன்று மக்களவையில் ராகுல் காந்தி பேசியது, பாஜக-வின ருக்கு மிகுந்த பயத்தை கொடுத்தது. இதனால் அவர்கள் முகமே நடுங்கிப் போனது. தற்போது ராகுலுக்கு உரிமை மீறல் நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது. அதற்குப் பதிலாக, பிரதமர் மோடி ராகுலின் கேள்விகளுக்கு நேரடியாக பதில் அளித்திருக்க வேண்டும். அவ்வாறு அளிக்காமல் இருப்பது, அவர்களின் சர்வாதிகாரத்தையும் கோழைத்தனத்தையும் காட்டுகிறது” என சிவசேனா கட்சியின் ஏடான ‘சாம்னா’ குறிப்பிட்டுள்ளது.