சென்னை, ஜன.6 - ஊதிய-உயர்வு குறித்து மின் வாரிய தொழிற்சங்கங்களுடன் நடைபெற்ற முத்தரப்பு பேச்சு வார்த்தை தோல்வியடைந்தது. மின்வாரிய ஊழியர்களுக்கு 1.12.2019 முதல் புதிய ஊதிய விகி தத்தை அமல்படுத்தியிருக்க வேண்டும். ஒப்பந்தம் முடிந்து 3 ஆண்டுகளை கடந்தும் நிர்வாகம் பேச்சுவார்த்தையை தொடங்கா மல் உள்ளது. ஊதிய ஒப்பந்த பேச்சு வார்த்தையை விரைந்து தொடங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜன.10 அன்று வேலை நிறுத்தம் செய்ய மின் வாரிய அனைத்து தொழிற் சங்க கூட்டமைப்பு அறைகூவல் விடுத்திருந்தது. இந்த வேலைநிறுத்தத்தை தவிர்க்கும் வகையில் சென்னை டிஎம்எஸ் வளாகத்திலுள்ள தொழி லாளர் நல இணை ஆணையர் அலுவலகத்தில் ஜன. 3அன்று தொடங்கிய முத்தரப்பு சமரச பேச்சுவார்த்தை தோல்விய டைந்தது. இந்நிலையில் செவ்வா யன்று (ஜன.6) நடைபெற்ற 2ம் கட்ட பேச்சுவார்த்தையும் தோல்விய டைந்தது. இதனையடுத்து செய்தியா ளர்களிடம் பேசிய கூட்டமைப்பு நிர்வாகி சேக்கிழார், “ஊதிய பேச்சு வார்த்தைக்குழுவில் அரசு தரப்பில் இருந்து இரண்டு ஐஏஎஸ் அதிகாரிகளை இணைத்து புதிய பேச்சுவார்த்தை குழுவை உரு வாக்கியுள்ளார்கள். இதுவரையி லும் மின்வாரிய அதிகாரிகள் தலை மையிலான குழுவிடம் பேசிதான் ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டு வந்தது. இதற்கு மாறாக, இந்தமுறை அரசு எதேச்சதிகார முறையில் செயல்பட்டு மின்வாரிய பேச்சு வார்த்தை குழுவில் 2 அதிகா ரிகளை புகுத்தியிருப்பது ஏற்புடையதல்ல. அந்த இரண்டு உறுப்பினர்களையும் நீக்க வேண்டும். இன்றைய தினம் நடை பெற்ற பேச்சுவார்த்தை தோல்வி யடைந்துள்ளது. இந்த நிலையில், ஜன.10 அன்றுதிட்டமிட்டப்படி வேலை நிறுத்தப்போராட் டத்தை தொடங்குவதற்கு தயா ராகிவிட்டோம் என்றும் இதற்கிடை யில், ஜன.9 அன்று நடை பெறும் மூன்றாம்கட்டப் பேச்சு வார்த்தையில் பங்கேற்பது என முடிவு செய்திருக்கிறோம் என்றும் தெரிவித்தனர்.