லிமா, பிப்.2- நாடாளுமன்றத்திற்கு முன்கூட்டி யே தேர்தல் நடத்த வேண்டும் என்ற பெரு மக்களின் கோரிக்கைகளை அந்நாட்டு நாடாளுமன்றம் நிரா கரித்திருக்கிறது. மக்களால் தேர்வு செய்யப்பட்ட ஜனாதிபதி பெட்ரோ காஸ்டில்லோ வை நீக்கியதோடு அவரைச் சிறை யிலும் அடைத்திருக்கிறார்கள். அவ ரின் விடுதலை மற்றும் நாடாளு மன்றத்திற்கு முன்கூட்டியே தேர்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலி யுறுத்தி பெருவில் மக்கள் போராட்டங் களை நடத்தி வருகிறார்கள். அர சின் அடக்குமுறைக்கு இதுவரை யில் 65 பேர் பலியாகியுள்ளனர். ஏரா ளமானோர் காயமடைந்துள்ளனர். இந்நிலையில் மக்களின் கோரிக்கையைப் பரிசீலிக்க பெரு நாடாளுமன்றம் கூடியது. டிசம்பர் 2023இல் தேர்தலை நடத்துவது என்ற தீர்மானம் உறுப்பினர்கள் முன்னால் வைக்கப்பட்டது. இந்தத் தீர்மா னத்தின் மீது நடந்த வாக்கெடுப்பில் 68 பேர் எதிர்ப்பு தெரிவித்தும்,
54 பேர் அதற்கு ஆதரவாகவும் வாக்களித்தார்கள். இரண்டு பேர் வாக்களிக்கவில்லை. தற்போதைய ஜனாதிபதி போலுவார்ட்டேயின் ஆதர வாளர்களும் தேர்தலை முன்கூட்டி நடத்துவதற்கு ஆதரவு தெரிவித்து வாக்களித்தார்கள். நாட்டின் பல பகுதிகளிலும் போராட்டங்கள் பரவி வருவதால், தேர்தல் குறித்த தீர்மானம் மீண்டும் நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்படும் என்று எதிர்பார்க்கப்படு கிறது. டிசம்பர் 7 ஆம் தேதியன்று தொடங்கி போராட்டம், சில மாகா ணங்களை முழுமையாகப் பாதித்துள்ளது. தற்போதைய ஜனாதிபதி பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையும் சேர்ந்திருக் கிறது. பெட்ரோ காஸ்டில்லோவின் சிறைத்தண்டனையை நீட்டிப்பது குறித்து அரசு ஆலோசித்து வரு கிறது. அவரை வெளியில் விட்டால், போராட்டங்கள் கட்டுக்கடங்காமல் போய் விடும் என்பது அவர்களின் கருத்தாகும்.