சென்னை,ஏப்.21- தமிழ்நாடு சட்டப்பேரவையில், காவல்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதிலளித்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 101 புதிய அறிவிப்புகளை வெளி யிட்டார். அதன் விவரம் வருமாறு:- மூன்று வழித்தடங்களில் போக்கு வரத்து ஒழுங்குமுறை கண்காணிப்பு மண்டல் அமைக்கப்படும். ஆண்டுதோறும் காவலர்களுக்கு சீருடைப்படி 4 ஆயிரத்து 500 ரூபாய் வழங்கப்படும் என அறிவித்த அவர், காவலர் குழந்தைகளுக்கான கல்வி உதவித்தொகை 30 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும். பெண் காவலர்களுக்காக சென்னை சிந்தாதிரிபேட்டையில் மகளிர் காவல் விடுதி கட்டப்படும் என்றும், சென்னையில் பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பிற்காக 5 கோடி ரூபாய் செல வில் 3 ஆயிரம் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும். மேலும், தமிழ்நாடு காவல்துறை, தீயணைப்புத்துறைக்காக சட்ட ஆலோசகர் என்ற பணியிடம் புதிதாக உருவாக்கப்படும் என்றும், மோப்ப நாய்க்கு வழங்கப்படும் உணவுப்படி ரூ. 200 இருந்து 300 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் எனவும் குறிப்பிட்டார். இதுதவிர கிரிப்டோ கரன்சி மோசடியைக் கண்டுபிடிக்க செயின் பகுப்பாய்வு கருவி வாங்கப்படும். நுண்ணறிவு பிரிவிலுள்ள காவல் ஆய்வாளர்கள் முதல் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் வரையிலான அதிகாரிகளுக்கு மடிக்கணினிகள் வழங்கப்படும். இணையதள குற்றப் பிரிவு தலைமையகத்திலுள்ள 1930 அழைப்பு மையம் மற்றும் கட்டுப் பாட்டு அறை விரிவாக்கம் செய்யப் படும்.
நடுத்தர வகை காவல் நிலையங் கள்-பிரிவுக்காக பல்வகை கையடக்க கணினி வழங்கப்படும். 332 காவல் நிலையங்களுக்கு தலா மூன்று என்ற எண்ணிக்கையில் 996 பல்வகை கையடக்க கருவிகள் வழங்கப்படும். கைவிலங்கு குற்றவாளிகளை கைது செய்யும் போது காவலர்கள் தாக்கப்படும் சம்பவங்களை தடுக்க ரிமோட் மூலம் கை விலங்கு போட வசதியாக 25 ரிமோட் கைவிலங்கு கருவிகள் வாங்கப்படும்.
கிரிப்டோ கரன்சி மோசடி
கிரிப்டோ கரன்சி மோசடியை கண்டு பிடிக்க செயின் பகுப்பாய்வு ரியாக்டர் கருவிகள் வாங்கப்படும். தென்காசி மாவட்டம் புளியறை, பரமக்குடி, நாச்சியார்கோவில், சோழபுரம், பெரும்பாக்கம், தாம்பரம், ஓட்டேரி ஆகிய காவல் நிலையங்களுக்கு புதிய கட்டிடம் கட்டப்படும். அணைக் கட்டு, மார்த்தாண்டம், விக்கிரவாண்டி ஆகிய 3 புதிய காவல் கோட்டங்கள் உருவாக்கப்படும். கடலூர், திருபாதிரிபுலியூரில் துணை கண்காணிப்பாளர் அலுவல கம் புதிதாக கட்டப்படும். 137 காவல் நிலைய கட்டிடங்கள் புதுப்பிக்கப் படும். தீயணைப்பு மற்றும் மீட்பு பணித்துறையில் நிலுவையில் உள்ள நீதிமன்ற வழக்குகளுக்கு சட்ட கருத்தை வழங்கவும், அரசு வழக்குரைஞர் தரத்தை உயர்த்த உதவும் சட்ட ஆலோசகர் என்ற புதிய பணியிடம் தீயணைப்பு மீட்பு பணிகள் துறை இயக்குநரகத்தில் உருவாக்கப்படும். காவலர் பயிற்சி கல்லூரியில் பணி யாற்றும் அதிகாரப்பணி விரிவுரை யாளர் மற்றும் கவுரவ விரிவுரையாளர் களுக்கு வழங்கப்படும் மதிப்பூதியம் உயர்த்தி வழங்கப்படும். திருநெல்வேலி வட்டார தடய அறிவியல் ஆய்வகத்தில் புதிதாக மரபணு ஆய்வு பிரிவு உருவாக்கப்படும் என்பது உள்பட 101 அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.