சென்னை, ஜூலை 16- அதிமுக இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்ட பின்பு எடப்பாடி பழனிசாமி சேலம் சென்றார். அங்கு பேசிய அவர், “சேலத்தில் உள்ள 11 தொகுதிகளில், அதிமுகவும் கூட்டணியில் இருந்த பாமகவும் சேர்ந்து 10 இடங்களில் வென்றது. சேலம் அதிமுகவின் கோட்டை. முதல்வர் ஸ்டாலின் அவ ர்களே, ஆட்சி உங்களுடையதாக இரு க்காலம். ஆனால், சேலம் மாவட்டத் தைப் பொறுத்தவரை அதிமுகவினு டையது” என்று பேசினார். இதற்கு பதில் அளித்துள்ள திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு, “சொந்தக் கட்சிக்குள்ளேயே தனக்கு ஆதரவு தேடி ஊர் ஊராக அலையும் பழனிசாமி, முதலமைச்சராக இருந்தபோது கொள் ளையடித்த பணத்தில் கூட்டத்தைத் திரட்டி வைத்துக் கொண்டு, “இந்தக் கூட்டத்தைப் பார்க்கும்போது, அதிமுக வெற்றி பெறுவதற்கான அச்சாரம் போட ப்பட்டுள்ளது. மு.க.ஸ்டாலின் எத்தனை அவதாரம் எடுத்தாலும் அதிமுகவை வீழ்த்த முடியாது”.
தன்னுடைய ஆட்சிக்காலத்தில் சொந்த பந்தங்கள் - ரத்த உறவு களுக்கு ஒட்டுமொத்தமாக காண்ட் ராக்ட் கொடுத்து கமிஷன் ராஜ்ஜியம் நடத்திய பழனிசாமி வகையறாக்கள் மீது ஒன்றிய அரசின் துறைகள் தொட ர்ச்சியாக ரெய்டு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அண்மையில் ரெய்டுக்குள்ளான கோவை சந்திரசேகர், அருப்புக் கோட்டை செய்யாதுரை ஆகியோ ருக்கு சொந்தமான இடங்களில் ரூ. 500 கோடி சொத்துகளுக்கான ஆவணங்கள் சிக்கியுள்ளன எனத் தெரிவிக்கப்பட்ட நிலையில், அதுபற்றி இதுவரை வாய் திறக்க வக்கில்லா தவர்தான் பழனிசாமி. அதிமுகவை தில்லி எஜமானர் களிடம் அடமானம் வைத்து, தன்னை யும் தான் கொள்ளையடித்த சொத்து களையும் பாதுகாத்துக் கொள்ளும் பழனிசாமி தலைமையிலான அட்டை க்கத்தி வீரர்கள் உங்கள் வெற்று வீரத்தை திமுகவிடம் காட்டி, தொடர்ந்து வாங்கிக் கட்டிக் கொள்ள வேண்டாம் என எச்சரிக்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.