புதுதில்லி, ஜன.23- சமத்துவமின்மை இடைவெளியை குறைக்க பெரும் செல்வந்தர்களுக்கு கூடு தல் வரி விதிக்குமாறு உலக நாடுகளுக்கு பொருளாதார அறிஞர் ஜோசப் ஸ்டிக் லிட்ஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். கொரோனா பேரிடருக்கு பிறகு ஏழை களுக்கும், பணக்காரர்களுக்கும் இடையிலான சமத்துவமின்மை இடைவெளி மிக வேகமாக அதிகரித்து வருகிறது. 3ல் இரண்டு பங்கு புதிய செல்வங்களை வெறும் 1 விழுக்காடு பணக்காரர் களே பெற்று வருகின்றனர் என சமீபத்திய ஆக்ஸ்பாம் ஆய்வு கூறுகிறது. உலக கோடீஸ்வரர் களுக்கு கூடுதலாக 5 விழுக்காடு வரி விதித்தாலே 200 கோடி மக்களை வறுமையின் கோரத்தில் இருந்து மீட்க முடியும் என்றும் அந்த ஆய்வு சுட்டிக்காட்டியுள்ளது. இத்தகைய சமத்துவமின்மையை குறைக்க பெரும் செல்வந்தர்களுக்கு அதிகபட்ச வரியாக 70 விழுக்காடு வரை விதிக்க வேண்டும் என நோபல் பரிசு பெற்ற பொருளாதார அறிஞர் ஜோசப் ஸ்டிக்லிட்ஸ் உலக நாடுகளை கேட்டுக் கொண்டுள்ளார். இதனை அபிகாயல் டிஸ்னி, ஹல்க் பட நடிகர் மார்க் ரப்பேலா உள்ளிட்ட 205 பணக்காரர்களும் வரவேற்று ள்ளனர். சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நடைபெற்ற உலக பொருளாதார மன்றத்தில் இதனை அவர்கள் முன்வைத்துள்ளனர்.