states

பள்ளிகளை முன்கூட்டியே திறப்பதா? அமைச்சர் எச்சரிக்கை

சென்னை,ஜூன் 1- தமிழ்நாட்டில் கோடை வெயிலின் தாக்கம் அதிக முள்ளதால் தனியார் கல்வி நிறுவனங்கள் ஜூன் 7 ஆம் தேதிக்கு முன்பாக பள்ளிகளை திறந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி எச்சரித்துள்ளார். சென்னை ராமாபுரத்தில் தனியார் பள்ளி அரசு உத்த ரவை மீறி ஜூன் 1 அன்று திறக்கப்பட்டது குறித்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது அவர் கூறியதாவது கோடை வெயில்  அதிகமாக இருப்பதை யொட்டி பள்ளிகள் திறக்கும் தேதியை 7 ஆம் தேதிக்கு தள்ளி வைத்திருக்கிறோம். முன்கூட்டியே பள்ளிகளை திறக்கக் கூடாது. அதை மீறி தனியார் பள்ளிகள் திறந்திருந்தால் அந்த பள்ளிகளின் மீது அதிகாரி கள் விசாரணை நடத்தி நட வடிக்கை மேற்கொள் வார்கள். சிபிஎஸ்இ பள்ளிக் கூடங் கள் அதுவும் 10 ஆம் வகுப் புக்கு மேல் திறந்திருக் கலாம்.  தனியார் மெட்ரிகுலே ஷன் பள்ளிக் கூடங்கள் திறந்திருந்தால் கடும்  நடவடிக்கை மேற்கொள்ளப் படும். இது சம்பந்தமாக அதிகாரிகளுக்கு தேவை யான உத்தரவுகள் பிறப்பிக் கப்பட்டுள்ளது. கல்வித் துறை அதிகாரிகள் மாவட்ட வாரியாக இதுபற்றி விசாரித்து வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

;