சென்னை, ஜன.31- சென்னையில் இனிவரும் ஆண்டு களில் சாலைகளில் மழைநீர் தேங்காது என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் கூறியுள்ளார். சென்னையில் மழை வெள்ளக் காலங்களில் சிறப்பாக பணி யாற்றிய அலுவலர்கள் மற்றும் பணி யாளர்களுக்கான பாராட்டு விழா மாநகராட்சியின் ரிப்பன் கட்டடத்தில் செவ்வாயன்று (ஜன.31) நடை பெற்றது. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: ஏற்கனவே இருந்த ஆட்சி யாளர்கள் அதிலும் குறிப்பாக பத்தா ண்டு காலமாக ஆட்சிப் பொறுப்பில் இருந்தவர்கள் எதுவும் செய்யாமல் இருந்துவிட்ட காரணத்தால், அந்த முதல்முறை மழை எந்த அளவிற்குப் பெய்தது என்பது உங்களுக்குத் தெரியும். அந்த மழையை, அந்த வெள்ளத்தைக் கட்டுப்படுத்துவதில் நமக்கு பல்வேறு நெருக்கடிகள் ஏற்பட்டன. ஆனால், அந்த நெருக்கடி களை நாம் ஒரு பாடமாக எடுத்துக் கொண்டு வரக்கூடிய காலக்கட் டங்களில் எப்படி நாம் செயல்பட வேண்டும் என்று திட்டமிட்டோம். 2021-ஆம் ஆண்டு திமுக அரசு பொறுப்பேற்றதும் பருவமழையின் போது மழை வெள்ளத்தால் பாதிக் கப்பட்ட பகுதிகளையும், வெள்ள மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளையும் பல முறை முதல்வர் என்ற முறையில் நேரடியாக பார்வையிட்டு, ஆய்வு செய்து பல்வேறு ஆலோசனைகளை வழங்கி, அந்த இடங்களில் உரிய பாது காப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தினேன். அதேபோல, அமை ச்சர்களும் எந்த அளவிற்கு பணி யாற்றினார்கள் என்பது உங்களுக்குத் தெரியும். இதையெல்லாம் பார்த்த காரணத்தினால், இனி வரக்கூடிய காலக்கட்டங்களில் மழை வெள்ளப் பாதிப்பிலிருந்து சென்னை மாநக ருக்கு நிரந்தரத் தீர்வினை உருவாக்க வேண்டும் என்று ஒரு முடிவு எடுத் தோம்.
அப்படி முடிவெடுத்த காரணத்தி னால்தான் ஒரு ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி திருப்புகழ் தலைமையில் ஒரு வல்லுநர் குழுவை நாம் நியமித்து, ஒரு மேலாண்மைக்குழுவாக அதை உருவாக்கி, அந்தக் குழு சென்னையில் பாதிக்கப்பட்ட அந்தப் பகுதிகளை எல்லாம் பார்வையிட்டு, வெள்ளம் பாதித்த இடங்களையெல்லாம் ஆய்வு செய்து, அந்தப் பகுதிகளில் இருக்கக்கூடிய மக்களிடத்திலும் ஆய்வு செய்து, அதற்கு பிறகு அறிக் கையை கிட்டத்தட்ட மூன்று கட்டங் களாக நம்முடைய அரசிடம் வழங்கி னார்கள்.இந்தக் குழுவின் ஆலோசனைப்படி, நம்முடைய மாநக ரில் பல்வேறு பகுதிகளில் மழைநீர் வடி கால்கள் அமைக்க பல்வேறு திட்டங் களை நாம் உருவாக்கினோம், அதற்காக நிதி ஒதுக்கீடு செய்தோம். பருவமழை துவங்குவதற்கு முன்பே இந்தப் பணிகளை முடிக்க உத்தரவு வழங்கினோம். 2021-ஆம் ஆண்டு பருவ மழையின்போது பெற்ற அனு பவத்தைக் கொண்டு, உடனடியாக நாம் எல்லா வகையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் குறுகிய காலத் தில் செய்து முடித்தோம். அதன் பயனை 2022-ஆம் ஆண்டு பருவமழையின் போது கண்கூடாகப் பார்த்தோம். இனிவரும் ஆண்டுகளில், மழைநீர் தேக்கம் இல்லாத பருவமழைக் காலங் களை சென்னை வாழ் மக்கள் நிச்ச யமாக பார்க்க இருக்கிறார்கள். இந்த அரசு மேலும் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது என்பதை மகிழ்ச்சியோடு நான் தெரிவித்துக் கொள்கிறேன்” . இவ்வாறு அவர் பேசினார்.