states

ரூ.1 கோடியும் கொடுக்கவில்லை; அரசு வேலையும் தரவில்லை!

சென்னை, பிப்.10 - அரசு மருத்துவர்களுக்கு நியாயமான  ஊதியம் உள்ளிட்ட பலன்கள் கிடைக் கும் வகையில் அரசாணை 354-ஐ  அமல்படுத்தக் கோரி இறுதிவரை போராடி யவர் அரசு மருத்துவர் லட்சுமி நரசிம்மன்.  இவர் கடந்த 2020 பிப்.6 ஆம் தேதி உயி ரிழந்தார். இந்த பின்னணியில், ‘மருத்துவர் லட்சுமி நரசிம்மனின் உயிர்த் தியாகத் துக்கு மதிப்பில்லையா?’ என்ற தலைப்பில்  கடந்த 7 ஆம் தேதி வெளியான செய்திக்கு  மறுப்பு தெரிவித்து, மருத்துவக் கல்வி  மற்றும் ஆராய்ச்சி இயக்குநர் ஜெ.சங்கு மணி அறிக்கை வெளியிட்டு இருக்கிறார்.  அதில், “அரசாணை 354-ஐ அமல் படுத்துவது குறித்து மருத்துவ சங்கங் களுக்குள் கருத்து வேறுபாடு காரணமாக தீர்வு எட்டப்படவில்லை. இதுகுறித்து ஒற்று மையுடன் ஒருமித்த கருத்தை தெரிவித் தால் கோரிக்கையை நிறைவேற்ற அரசு  தயாராக உள்ளது. மறைந்த மருத்துவர் லட்சுமி நரசிம்மன் வாரிசுதாரர்களுக்கு பணி வழங்க அமைச்சர் உத்தரவிட்டும், இதுவரை அவர்கள் ஏற்க முன்வரவில்லை.  மேலும் பணியின்போது உயிரிழந்த லட்சுமி நரசிம்மன் உள்ளிட்ட 6 மருத்து வர்களின் வாரிசுதாரர்களுக்கு தலா ரூ.1 கோடி நிதி, கடந்த ஜன.10 ஆம் தேதி வழங்கப்பட்டது” என தெரிவித்திருந்தார். இந்நிலையில், மறைந்த லட்சுமி நர சிம்மனின் மனைவி அனுராதா கூறுகை யில், எங்கள் குடும்பத்துக்கு ரூ.1 கோடி நிதி  கொடுத்ததாகவும், பணி நியமன ஆணை  வழங்கியதாகவும் மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநர் ஜெ.சங்கு மணி தெரிவித்துள்ளார். இது உண்மைக்கு மாறானது. நான் அவரை தொடர்பு கொண்டு கேட்டாலும் சரியான விளக்கம் அளிக்க வில்லை. அப்படியே ரூ.1 கோடி வழங்கு வதாக இருந்தாலும் அது அரசு பணம் இல்லை. ஒவ்வொரு அரசு மருத்துவரும் மாதம் தோறும் தங்கள் ஊதியத்தில் இருந்து வழங்கும் தொகையாகும். எனவே, இந்த விவகாரத்தில் ரூ.1 கோடி யும் கொடுக்கவில்லை. பணி நியமன ஆணையும் வழங்கவில்லை. இந்த இரண்டையும் நாங்கள் கோரியதும் இல்லை. உண்மைக்கு மாறான தகவலை தெரிவித்ததற்காக நீதிமன்றம் செல்ல இருக்கிறேன். எனது கணவரின் இலக்கான  அரசாணை 354-ஐ அமல்படுத்த வேண்டும்” என்றார். இந்நிலையில், போராட்டக் குழு தலைவர் எஸ்.பெருமாள்பிள்ளை வெளி யிட்ட அறிக்கையில்,  ஜெ.சங்குமணி கூறியது முற்றிலும் தவறான தகவல். அரசாணை 354-ஐ அமல்படுத்த அனைத்து அரசு மருத்துவர் சங்கங் களுமே வலியுறுத்தியுள்ளன. ஒருமித்த கருத்து இல்லை என்பது அப்பட்டமாக தவறானது. அதை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று கூறியுள்ளார்.