ஆண்டுதோறும் ஜனவரி 11ஆம் தேதி முதல் ஜனவரி 17ஆம் தேதி வரை ஒன்றிய, மாநில அரசுகளின் போக்குவரத்துத் துறை சாலை பாதுகாப்பு வாரம், சாலை விதிகள் மற்றும் விபத்து குறைப்பு பற்றிய விழிப்புணர்வு விழாவை நடத்துகிறது. இந்தியாவில் சாலை விபத்துகளில் தினசரி 400 முதல் 450 பேர் உயிரிழக்கின்றனர். 2021ஆம் ஆண்டில் இந்தியாவில் நடந்த சாலை விபத்துகளின் விபரம் வருமாறு: 2021இல் நடந்த மொத்த சாலை விபத்து கள் எண்ணிக்கை 4,12,432. விபத்தில் இறந்த வர்களின் எண்ணிக்கை 1,53,972. விபத்தில் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 3,84,448. 2020ஐ விட 2021இல் விபத்துகள் அதிகம் (12.6 விழுக்காடு). 2020-ஐ விட 2021இல் விபத்தில் இறந்தவர்கள் அதிகம் (16.9 விழுக்காடு). 2020-ஐ விட 2021இல் விபத்தில் காயமடைந்தவர்கள் அதிகம் (10.39 விழுக்காடு). 2021-இல் தேசிய நெடுஞ்சாலைகளில் நடந்த மொத்த சாலை விபத்துகள் 1,28,825. 2021இல் மாநில நெடுஞ்சாலைகளில் நடந்த மொத்த சாலை விபத்துகள் 96,382. 2021இல் பிற சாலைகளில் நடந்த மொத்த சாலை விபத்துகள் 1,87,225. இந்தியா, ஐக்கிய நாடுகள் சபை வகுத்த நிலையான வளர்ச்சி இலக்கான 3.6-ஐ (சாலை விபத்துகள்) எப்போது அடையும்?
சீரான வேகத்தில் தேவையான பொருளா தாரச் செலவிலும் ஆட்சியாளர்களின் விருப்பம் மற்றும் ஒத்துழைப்புடன் மக்களின் நட மாட்டத்தை கட்டுப்படுத்தி, 2020இல் நடந்த சாலை போக்குவரத்து இறப்புகளை 2030க்குள் பாதியாகக் குறைக்கும் நிலையான வளர்ச்சி இலக்கை (எஸ்டிஜி-3.6) அடைய வழிவகுக்கி றது. விபத்துகளை குறைப்பதில் நிர்வாகத்தின் தோல்வியால் நடப்பதை காட்டிலும் மனித தவறுகளின் விளைவாக சாலை விபத்துகள் நடைபெறுகின்றன. நமது சாலை அமைப்புகள் அனைவருக்கும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் வடிவமைக் கப்பட வேண்டும்.
இந்தியாவில் நாளுக்கு நாள் அதிக விபத்துகள் ஏற்பட என்ன காரணம்?
- 40 கி.மீ. அல்லது அதற்கும் அதிகமான வேகத் தில் செல்லக்கூடிய 86 விழுக்காடு இந்திய சாலைகளில் பாதசாரிகளுக்கு இன்னும் முறையான நடைபாதைகள் இல்லை.
- 80 கி.மீ. அல்லது அதற்கும் அதிகமான வேகம் செல்லக்கூடிய இந்திய சாலைகளில் 76 விழுக்காடு மத்திய தடுப்புச்சுவர் கொண்டு பிரிக்கப்படவில்லை. இதனால், கணிக்கக் கூடிய சராசரி இடைவெளியில் நேருக்குநேராக மோதி அதிகமானோர் இறக்கிறார்கள்.
- 35 விழுக்காடு இந்திய சாலைகளில் பாதசாரி கடக்கும் பாதைகள் மிக மோசமான நிலை யில் உள்ளன.
- சாலைகளின் தர மதிப்பீட்டில் ஒன்று அல்லது 2 நட்சத்திர அளவீடு கொண்ட 50 விழுக்காடு சாலைகள் இந்தியாவில் உள்ளது. G இந்தியாவில் 9.91 விழுக்காடு பொதுமக்கள் குடித்துவிட்டு வாகனம் இயக்குவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.
- இந்தியாவில் ஏழைகளின் பங்கு (தேசிய சராசரி) 25.01 விழுக்காடாகும். ஸ்போர்ட்ஸ் பைக்குகள் மற்றும் அதிவேகத்தில் செல்லக்கூடிய வாகனங்களை நடுத்தர வர்க்கம், கீழ் நடுத்தர வர்க்க பெற்றோர் கள் வாங்கும் சக்தி கொண்டுள்ளதால், அதை தங்கள் டீன் ஏஜ் குழந்தைகளுக்கு எளிதாக வாங்கிக் கொடுத்து விடுகின்றனர். இதனால் 25 முதல் 30 வயதுக்குள் 25 விழுக்காடு பேர் பலியாகக் கூடிய விபத்து களுக்கு வழிவகுக்கிறது.
கண் மறைவுப் பிரதேசங்கள்
இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலைகளில் 700 கண் மறைவு பிரதேசங்கள் 10 விழுக்காடு உள்ளது. இது பெருமளவில் குறைக்கப்பட வேண்டும். (உலகம் முழுவதும் 80,000 கண் மறைவு பிரதேசங்கள் உள்ளன). நாட்டி லேயே தமிழகத்தில்தான் அதிகமான கண் மறைவு பிரதேசங்கள் (100) உள்ளன.
2021ஆம் ஆண்டில், இந்தியாவில் அதிவேகம் காரணமாக சாலையில் 90,000 குடும்பத்தலை வர்களின் இறப்புகள் நடைபெற்றுள்ளன. சாலை பிரச்சனைகளை திட்டமிடப்படாத, தன்னிச்சையான, பொறுப்பற்ற மற்றும் அலட்சிய அணுகுமுறைகள் தீர்க்காது. சாலைப் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து மேலாண்மை விஷயங்களை மேம்படுத்த வும், விபத்துகளைக் குறைக்கவும் பின்வரு வனவற்றை நாம் செய்ய வேண்டும்:
தேவை விபத்தை குறைக்கும் உத்தி கொண்ட திட்டம்
அரசு மற்றும் ஆட்சியாளர்களின் ஒத்துழைப்பு டன் சாலை விபத்தை குறைக்கும் உத்திகளை கொண்ட திட்டத்தை தயாரிக்க வேண்டும் G சாலை விபத்தை குறைப்பதற்கான திட்டத்தி ற்கு போதுமான நிதி ஒதுக்க வேண்டும்
சாலைப் பாதுகாப்பு குறித்து உயர்நிலைப் பள்ளியிலிருந்தே சிறந்த தரத்துடன் கூடிய பாடத்திட்டம் அமல்படுத்த வேண்டும் மற்றும் அதை தொடர்ந்து கல்லூரிப் பாடத் திட்டத்திற்கும் விரிவுபடுத்த வேண்டும்
கைமுறை செயல்பாட்டில் ஓட்டுநர் உரிமம் வழங்கும் செயல்பாட்டு முறையில் கடுமை யான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.
அதிவேக நெடுஞ்சாலைகள் மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளில் அதிகபட்ச வாக னங்களின் வேக வரம்பினை மணிக்கு 80 கி.மீ. என்ற சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை அமல்படுத்த வேண்டும்.
சாலை பாதுகாப்பு ஆணையத்திற்கு ஒன்றிய, மாநில அரசுகள் சாலை பாது காப்பு உத்திகள், அடையக்கூடிய இலக்கு கள் மற்றும் செயல் திட்டத்தை உருவாக்க உத்தரவிட வேண்டும்.
கண்காணிக்கும் சாலை பாதுகாப்பு ஆணையம்
சாலை விதிகளை அமல்படுத்தக்கூடிய அதி காரம் கொண்ட ஒருங்கிணைந்த அமைப் பாக சாலை பாதுகாப்பு ஆணையத்தை விபத்துகளை தடுப்பதில் தொடர்ச்சியான அர்ப்பணிப்பு, ஒத்துழைப்பு, ஒருங்கி ணைப்பு மற்றும் கண்காணிப்பு கொண்ட தாக மாற்ற வேண்டும்.
நமது சாலைகளில் ஏற்படும் மரணங்கள் மற்றும் கடுமையான காயங்களை தடுக்க பாதுகாப்பான சாலைகள் உதவும். சாலைக ளின் தர மதிப்பீட்டில் 3 அல்லது அதற்கு மேலான நட்சத்திர அளவீடு கொண்ட சாலை கள் அமைக்கப்பட வேண்டும்.
சாலை பாதுகாப்பு விஷயங்களில் உண்மை யான தகுதி, பயிற்சி பெற்ற, திறமையான மற்றும் அனுபவம் வாய்ந்த நிபுணர்களின் பற்றாக்குறை இந்தியாவில் இருக்கிறது. அரசாங்கத்தின் முன்முயற்சியாக அனை த்து பொறியியல் கல்லூரிகளில் மேம் படுத்தப்பட்ட சாலை பாதுகாப்பு கல்வியை பட்டய, பட்டப்படிப்புகள் மற்றும் முதுகலை பட்டப்படிப்புகள் வழங்குவதற்கு ஒன்றிய, மாநில அரசுகள் உத்தரவிட வேண்டும். இவற்றை செய்தாலே பெரும்பாலான சாலை விபத்துகள் குறையும். ‘‘விபத்தினை விதியென்று கொள்ளோம், ஆராய்ந்து மதி கொண்டு வெல்வோம்’’
கட்டுரையாளர் :
பன்னாட்டு பொதுப்போக்குவரத்து நிபுணர்