புதுச்சேரி, டிச. 18- புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வேண்டும் என்ற விவகாரத்தில் முதல மைச்சர் ரங்கசாமிக்கு ஆதரவு தருவ தாக திமுக அறிவித்துள்ளது. புதுச்சேரியில் ரங்கசாமி தலை மையில் என்.ஆர்.காங்கிரஸ்-பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. எனினும், இரு கட்சிகளுக்கு இடையே அவ்வப்போது கருத்து மோதல்கள் ஏற்பட்டு வருகின்றன. இந்நிலையில் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்கக்கோரும் குழுவைச் சந்தித்த முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்த கருத்துக்கள் புதிய புயலைக் கிளப்பியுள்ளது. பாஜக கூட்டணியில் தங்களுக்கு மரியாதை இல்லை என்ற நிலை உருவாகி உள்ளதாகவும், அதி காரம் இல்லாததால் தினசரி மன உளைச்சல் ஏற்படுவதாகவும் அவர் கூறியிருக்கிறார். தங்களால் மக்க ளுக்கு எதுவுமே செய்து கொடுக்க முடியவில்லை என்று கூறியுள்ள ரங்க சாமி, ஒன்றிய அரசு முழு ஒத்து ழைப்பைத் தருவதில்லை என்றும் வேத னையுடன் கூறியுள்ளார்.
கூட்டணியில் புகைச்சல்
முதலமைச்சர் ரங்கசாமி தன்னு டைய ஆதங்கத்தை வெளிப்படுத் ்தினால் மட்டும் மாநில அந்தஸ்து பெற முடியாது என்றும், அதற்கான ஆக்கப் பூர்வமான நடவடிக்கையை அவர் எடுக்க வேண்டும் என்றும் முன்னாள் முதல்வர் நாராயணசாமி வலியுறுத் தியுள்ளார். தம்மால் முடியவில்லை என்றால் முதல்வர் பதவியை ரங்கசாமி ராஜினாமா செய்ய வேண்டும் என கூட்டணியில் இடம்பெற்றுள்ள அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வையாபுரி மணிகண்டன் தெரிவித்துள்ளார். அதே நேரத்தில் மாநில அந்தஸ்து விவகாரத்தில் முதல மைச்சர் ரங்கசாமிக்கு திமுக பக்க பலமாக இருக்கும் என சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சிவா தெரி வித்துள்ளார்.
16 முறை தீர்மானம்
யூனியன் பிரதேசமான புதுச் சேரிக்குத் தனி மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என இதுவரை 16 முறை சட்டமன்றத்தில் தீர்மானம் நிறை வேற்றப்பட்டுள்ளது. எனினும், இப்பிரச் சினைக்குத் தீர்வு காணப்படாததால், இந்த விவகாரம் மீண்டும் சூடு பிடித்துள்ளது.