திமுக எம்.பி.க்கள் வெளிநடப்பு
மணிப்பூர் கலவரம் குறித்து நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி பேசுவதை உறுதி செய்ய வேண்டும். 25 ஆண்டுகளாக தில்லியில் ஆட்சியை பிடிக்க முடியாத விரக்தியில்தான் பாஜக அரசு அவசர சட்டத்தை கொண்டு வந்துள்ளது என மக்களவையில் திமுக எம்.பி. தயாநிதிமாறன் பேசி னார். இதையடுத்து தில்லி நிர்வாக சிறப்பு மசோதா குறித்த விவாதத்தில் தயா நிதி மாறன் பேசும் போது, துணை சபாநாயகர் ராஜேந் திர அகர்வால் நேரம் முடிந்து விட்டது எனக் கூறி அவர் பேச அனுமதி மறுத்தார். தமிழ் நாட்டில் ஆளுநர் ரவி மசோ தாக்களை கிடப்பில் போட்டுள்ளதாக குற்றம் சாட்டி கொண்டிருந்தபோது, இடை நிறுத்தி நேரம் முடி ந்துவிட்டதாக துணை சபாநாயகர் கூறியதை யடுத்து திமுக எம்.பி.க்கள் அவையில் இருந்து வெளி நடப்பு செய்தனர்.
ஆசிய ஹாக்கி: உதயநிதி தொடங்கி வைத்தார்
சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதா கிருஷ்ணன் மைதானத்தில் ஆக.3 முதல் ஆக.12 வரை நடைபெறும் ஆசிய ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டியை விளையாட்டுத்துறை அமை ச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். 16 ஆண்டுகளுக்கு பிறகு சென்னையில் நடைபெறும் ஆசிய ஆடவர் ஹாக்கி தொடருக்கான பிரம்மாண்ட ஏற்பாடுகளை, ஹாக்கி யூனிட் ஆப் இந்தியா மற்றும் தமிழ்நாடு அரசு இணைந்து செயல்படுத்தியுள்ளன.
சுரங்க ஊழலில் பாஜக எம்பி பிரிஜ் பூஷண்
பாஜக ஆளும் உத்தரப் பிரதேச மாநிலத்தின் கோண்டாவில் பாஜக எம்பி பிரிஜ் பூஷண் சிங் சட்ட விரோதமாக சுரங்கம் தோண்டியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளுக்கு உண்மை நிலையைச் சரி பார்த்து, தகுந்த நட வடிக்கை எடுக்க வேண்டும் என ராஜா ராம் சிங் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தை (NGT) அணுகியுள்ளார். பிரிஜ் பூஷண் சிங் சட்ட விரோதமாக சுரங்கத்தை தோண்டுவது மட்டுமல்லா மல் தினமும் 700 ஓவர் லோட் லாரிகள் மூலம் சரக்கு பரிவர்த்தனை செய்கிறார் என ராஜா ராம் சிங் குற்றம் சாட்டியுள்ளார். ஏற்கெனவே மல்யுத்தத்தில் சிறுமிகளை கூட விடாமல் பாலியல் தொந்தரவு அளித்த புகாரில் பாஜக எம்பி பிரிஜ் பூஷண் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
திறந்தநிலைப் பல்கலை.க்கு ஏ பிளஸ் அங்கீகாரம்
சென்னை, ஆக. 3- தமிழ்நாடு அரசின் கீழ் இயங்கக் கூடிய தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தின் செயல்பாடுகளை விரிவாக ஆய்வு செய்த தேசிய தர நிர்ணய குழுவினர், அந்த கல்வி நிறு வனங்களில் இருக்கக் கூடிய வசதிகள், தகுதி களுக்கு ஏற்ப பல்கலைக்கழகத்திற்கு ஏ பிளஸ் என்ற உயர்ந்தபட்ச அங்கீகாரம் வழங்கியுள்ளனர். பல்கலைக்கழகம் தொடங்கபட்டு சுமார் 20 ஆண்டுகளில் இது போன்ற தேசிய தர நிர்ணய குழுவின் உச்சபட்ச அங்கீகாரத்தை பெறுவது இதுவே முதல்முறை ஆகும்.
கடும் எதிர்ப்பை மீறி மசோதாக்கள் நிறைவேற்றம்'
புதுதில்லி, ஆக. 3 - வனங்களை கார்ப்பரேட்டுகளின் வணிக நடவடிக்கைக்கு திறந்துவிடும் வனப் பாதுகாப்பு (திருத்த) மசோதா-வை, மோடி அரசு புதனன்று மாநி லங்களவையில் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில், தில்லி யூனியன் பிரதேசத்தில் அதிகாரிகள் நியமனம், மாறுதல்கள் தொடர்பான விஷயங்களில், ஒன்றிய அரசே அதிகாரத்தை எடுத்துக் கொள்வதற்கான புதிய சட்ட மசோதாவையும், எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி மக்களவையில் வியாழனன்று குரல் வாக்கெடுப்பு மூலம் மோடி அரசு நிறை வேற்றிக் கொண்டுள்ளது. இந்த இரண்டு மசோதாக் களும் அரசியலமைப்புச் சட்டத்திற்கு விரோதமாக மோடி அரசால் வலிந்து உருவாக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளன.
ஈரோடு காவிரியாற்றில் மூழ்கி மூன்று பேர் உயிரிழப்பு
ஈரோடு, ஆக.3- ஈரோடு மாவட்டத்தில் ஆற்றில் மூழ்கி மூன்று பேர் உயிரிழந்தனர். ஈரோடு மாவட்டம், கொடுமுடி தாலுகா, வெங்கம்பூர்-அ கிராமத்தின் வழியாக ஓடும் காவிரியாற்றில் கொடு முடி, தட்டாம்பாளையம், கொண்டலாம்புதூர் பகுதி யைச் சேர்ந்த கோபி மகன் குப்புராஜ், (19), சிவகுமார் மகன் ஜெகதீஸ்வரன் (18) மற்றும் கோபி மகன் சௌத்ரி (14) ஆகிய மூவ ரும் எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கி உயிரிழந்த னர். இவர்கள் மூன்று பேரும் கோவில் திருவிழா விற்காக காவிரியாற்றில் தீர்த்தம் எடுக்கச் சென்ற போது நீரில் மூழ்கியுள்ள னர். மூன்று பேரின் குடும்பத்தினருக்கும் தலா இரண்டு இலட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க முதல் வர் மு.க.ஸ்டாலின் உத்தர விட்டுள்ளார்.
அதிமுக பிரமுகர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை
கோயம்புத்தூர், ஆக.3- கோவையில் அதிமுக பிரமுகர் வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனை யில் ஈடுபட்டனர். அமைச்சர் வி.செந்தில்பாலாஜி மீது தொடரப்பட்ட வழக்கு சம்பந்தமாக, கோவையில் அவருக்கு சொந்தமான இடங்கள், நெருக்கமானவர்களின் இடங் களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இந்நிலையில், கோவையில் ராம நாதபுரம் பகுதியில் உள்ள டாஸ்மாக் மேற்பார்வையாளராக உள்ள முத்து பாலன் என்பவரது வீட்டில் வியாழனன்று அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இவர், அதிமுகவின் டாஸ்மாக் தொழிற்சங்க பிரிவின் நிர்வாகியாக உள்ளார். மேலும், அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு நெருக்கமானவர் என கூறப்படுகிறது. இவர் டாஸ்மாக் மேற்பார்வையாளராக பணியாற்றும் அதேநேரத்தில், இவர், ரியல் எஸ்டேட் மற்றும் மொத்த ஸ்கிராப் (பழைய பொருட்கள்) விற்பனையிலும் ஈடுபட்டு வருவதாக தெரிகிறது. அதேபோன்று திருச்சி சாலையில் உள்ள அருண் அசோசியேட் கட்டுமான நிறுவனத்தின் அலுவலகம் மற்றும் அதன் உரிமையாளர் அருண் இல்லத்திலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது. சோத னை நடைபெறும் இடங்களில் போலீ சார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர்.
காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு
சென்னை,ஆக.3- தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை பழவந்தாங்கல் உள்ள காவல் நிலையத்தில் வியாழனன்று (ஆக.3) திடீர் ஆய்வு மேற்கொண்டார். சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் நினைவு நாள் தமிழ்நாடு அரசு சார்பில் அனுசரிக்கப் பட்டது. அதன் ஒரு பகுதியாக சென்னை கிண்டி திரு.வி.க. தொழிற்பேட்டை வளாகத்தில் அமைந்துள்ள சிலைக்கு வியாழனன்று (ஆக.3) முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செய்தார். அப்போது அமைச்சர்கள் க.பொன் முடி, மு.பெ.சாமிநாதன், பி.கே.சேகர்பாபு, கயல்விழி செல்வராஜ், சென்னை மேயர் பிரியா ராஜன், துணை மேயர் மகேஷ் குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர். அதனைத்தொடர்ந்து, பழவந்தாங்கல் காவல் நிலையத்திற்கு சென்றார். அப்போது, காவல் நிலை யத்தில் பராமரிக்கப்பட்டு வரும் கோப்பு களையும் ஆய்வு செய்தார்.
தாம்பரத்திலிருந்து கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்
சென்னை, ஆக.3- ரயில்களில் கூட்ட நெரிசலை குறைப்பதற்காக தாம்பரத்தில் இருந்து கன்னியாகுமரிக்கு சிறப்பு கட்டண ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் வெள்ளிக்கிழமை பிற்பகல் 3.30 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு மறு நாள் அதிகாலை 4.30 மணிக்கு கன்னியா குமரி சென்றடைகிறது. அதே போல ஆக.5 ஆம் தேதி (சனிக் கிழமை) இரவு 7.10 மணிக்கு கன்னியா குமரியில் புறப்பட்டு மறுநாள் காலை 9.20 மணிக்கு தாம்பரம் வந்து சேர்கிறது.
உலகச் செய்திகள்
சீனாவில் ஸ்மார்ட்போன் பயன்படுத்த புதிய கட்டுப்பாட்டு நடைமுறைகளை அந்நாட்டு அரசு கொண்டு வரவுள்ளதாக, சீனாவின் சைபர் ஸ்பேஸ் ரெகுலேட்டர் நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில்,”16 முதல் 18 வயதுடையவர்கள் தங்கள் ஸ்மார்ட்போன்களில் ஒரு நாளைக்கு அதிகபட்சம் இரண்டு மணிநேரம் மட்டுமே ஸ்மார்ட்போன் பயன்படுத்த வேண்டும். 8 முதல் 16 வயது வரையிலான குழந்தைகளுக்கு ஒரு மணிநேரமும், 8 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு 8 நிமிடங்கள் மட்டுமே ஸ்மார்ட்போன் பயன்படுத்த பெற்றோர்கள் அனுமதிக்க வேண்டும். மேலும் ஸ்மார்ட்போன் வழங்கு பவர்கள் சிறிய பயன்முறையை அறிமுகப்படுத்த வேண்டும்” என சீனாவின் செல்போன் கட்டுப்பாட்டாளர் அமைப்பு நெறிமுறைகளை வகுத்துள்ளதாக சைபர்ஸ் பேஸ் ரெகுலேட்டர் தகவல் தெரிவித்துள்ளது.
கிழக்கு ஆசிய நாடான சிங்கப்பூரில் போதைப் பொருள் கடத்துவது கொடிய குற்றமாக கருதப்படும் நிலையில், போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக இரண்டு வாரங்களில் மூன்றாவது கைதியை வியாழனன்று தூக்கிலிட்டது சிங்கப்பூர் அரசு. கடந்த 2019இல் 55 கிராம் ஹெராயின் போதைப் பொருளை கடத்திய குற்றத்திற்காக கைது செய்யப்பட்ட முகமது ஷல்லே அதுல் லத்தீப்-க்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
பிலிப்பைன்ஸ் நாட்டின் லாவோக் நகரத்தில் “செஸ்னா 152” என்ற சிறிய ரக பயிற்சி விமானத்தில் இந்திய மாணவர் அன்ஷும் ராஜ்குமார் பயிற்சி மேற்கொண்டார். பயிற்சியின் பொழுது திடீரென விமானம் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்கு உள்ளானதில் அன்ஷும் ராஜ்குமார், பயிற்சியாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
“லிதுவேனியாவில் நடைபெற்ற நேட்டோ உச்சி மாநாட்டில் உக்ரைன் ஜனாதிபதி விளாடி மிர் ஜெலென்ஸ்கியின் கருத்து எதையும் எதிரொலி ப்பதாக இல்லை. ஜெலென்ஸ்கியின் கருத்து எரிச்ச லாக இருந்தது” என அமெரிக்கா கூறியுள்ளதாக சிஎன்பிசி செய்தி நிறுவனம் கூறியுள்ளது. லிதுவேனியா நேட்டோ உச்சிமாநாட்டில்,”நேட்டோவின் உறுப்பு நாடு களின் நிபந்தனைகளை அபத்தமானது” என கூறியிருந்தார்.
இங்கிலாந்து நாட்டின் வடக்குப் பகுதியில் உள்ள எண்ணெய் மற்றும் எரிவாயு எடுக்கும் பணியை மேலும் விரிவுபடுத்த அந்நாட்டு அரசாங்கம் திட்ட மிட்டுள்ளது. இதற்கு கிரீன்பீஸ் சுற்றுச்சூழல் குழு எதிர்ப்பு தெரிவித்து பிரதமர் மாளிகையை 200 மீட்டர் கருப்புத் துணியால் போர்த்தி போராட்டம் நடத்தினர். போராட்டத்தின் பொழுது “ரிஷி சுனக் அவர்களே! எண்ணெய் லாபமா அல்லது நமது (நாட்டின்) எதிர்காலமா?” என கேள்வி எழுப்பியுள்ளனர். பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் தற்போது அமெரிக்காவின் கலி போர்னியாவில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.