பெல் சிஐடியு ஸ்தாபகத் தலைவர்களில் ஒருவர் தோழர் பொன்மாலா. அவசரநிலை காலத்தில் பெல் சிஐடியு தொழிற்சங்கத்தை வழிநடத்தியவர். 77ஆம் ஆண்டு தொழிற்சங்க அங்கீகார தேர்தலில் சிஐடியு முதன்மை சங்கமாக வெற்றி பெற்ற பின்னணியில் அனைத்து சங்கத்தை யும் ஒரு சங்கமாக மாற்ற வேண்டும், அனைத்து தொழிற் சங்கத்தையும் கலைக்க வேண்டும் என்ற பிரச்சனையின் போது ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சிஐடியு சங்கத்தை தாக்க முற்பட்டனர். மேலும் பெல் கேட்டில் தோழர் பொன் மாலாவை சூழ்ந்து கொண்டு சிஐடியு சங்கத்தை கலைக்க நிர்ப்பந்தித்தனர். எக்காரணம் கொண்டும் சிஐடியு கொடியை இறக்கமாட்டேன், சங்கத்தை கலைக்க அனுமதிக்க மாட்டேன் என இரவு 10 மணிக்கு தன்னந்தனியாக உறுதியோடு நின்று சிஐடியு சங்கத்தை பாதுகாத்தவர். பெல் தொழிலாளர்களுடைய பல்வேறு வேலை நிறுத்தங் கள், போராட்டக் களங்களில் தொழிலாளர்கள், தொழிற் சங்கத்தை ஒன்றுபடுத்த களத்தில் கடுமையான முயற்சி எடுத்து தொழிற்சங்க ஒற்றுமையின் வடிவமாக நின்றவர் தோழர் பொன்மாலா. சிஐடியு சங்கத்திற்குள் ஒற்றுமையை பாதுகாக்க முன்னணியில் நின்றவர். 1982 வேலை நிறுத்தத்தின் போது கைது செய்யப்பட்டு ஒரு மாதம் சிறை யிலும், ஒரு மாதம் தலைமறைவாகவும் இருந்து செயல் பட்டவர். சிஐடியு மாநிலக்குழு உறுப்பினராகவும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினராகவும் செயல்பட்டவர். தோழர் பொன்மாலா கேரளாவில் பிறந்தவராக இருந்தா லும் போராட்டக் களங்களில் தொழிலாளர்கள் புரிந்து கொள்ளும் வகையில் மிக எளிமையாக தமிழில் பேசக்கூடிய வர். நல்ல பாடகர். தீக்கதிரை தினமும் படிக்கக்கூடியவர். தோழர் பொன்மாலா, கட்சி, தொழிற்சங்கம் மற்றும் தொழிலாளி வர்க்கத்திற்கு விசுவாசமாக தன் வாழ்நாள் முழுவதும் உறுதியுடன் செயல்பட்டவர். இவரது மறைவு செங்கொடி இயக்கம் மற்றும் திருச்சி மாவட்ட தொழிலாளர்களுக்கு மிகப்பெரிய இழப்பு.