இந்தியாவின் கூட்டாட்சி கட்டமைப்பை சிதைக்கும் “ஒரே நாடு ஒரே தேர்தல்” திட்டம் நாட்டிற்கு நல்லதல்ல. இந்த மக்கள் விரோத முடிவுக்கு எதிராக அனைவரும் தங்கள் அரசியல் சார்புகளுக்கு அப்பாற்பட்டு குரல் கொடுக்க வேண்டும்.
மணிப்பூரில் 500க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். லட்சக்கணக்கானோர் முகாம்களில் இருக்கின்றனர். இதற்கு பதில் சொல்ல வேண்டிய, தடுப்பதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டிய மணிப்பூர் பாஜக முதல்வரும், பிரதமர் மோடியும் மவுனம் சாதிக்கிறார்கள். இவர்கள் கேள்வி கேட்க ஆள் இல்லாத இடத்தில் அலங்காரமாக பேசுகிறார்கள்.
அரசியலமைப்புச் சட்டம் ஒரு ஆவணம் மட்டுமல்ல, அது நம் குடியரசின் இதயமும் ஆன்மாவும் ஆகும். மிகுந்த வருத்தத்துடனும், கவலையுடனும், வேதனையுடனும் சொல்கிறேன், ஒன்றிய பாஜக அரசு தொடர்ந்து அரசியலமைப்பை புல்டோசர் கொண்டு அழித்துக் கொண்டிருக்கிறது.
இல்லாத சாவர்க்கரை பற்றி நாம் விவாதம் நடத்தி வருகிறோம். ஆனால் பிரதமர் மோடியே இன்றைய நவீன கால சாவர்க்கர் தான்.
ஜம்மு-காஷ்மீரில் போதைப்பொருள் குற் றங்கள் அதிகரித்து வருவதாக தகவல் வெளி யாகியுள்ளது. 2021ஆம் ஆண்டிலிருந்து காஷ்மீ ரில் போதைப்பொருள் தொடர்பாக 6,500க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும் போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக 9,424 கைதுகள் நிகழ்ந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி (94) உடல்நலக்குறைவால் சனிக் கிழமை அன்று தில்லி அப்பல்லோ மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், ஞாயிற்றுக்கிழமை அன்று அவர் தீவிர சிகிச்சை பிரிவிற்கு மாற்றப்பட்டார்.
தாய்லாந்தில் இருந்து மும்பைக்கு பார்சல் மூலம் விமானத்தில் கடத்திக் கொண்டு வரப்பட்ட 12 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப் பட்டது. இதுதொடர்பாக 2 பேர் கைது செய்யப் பட்டனர்.
கேரள மாநிலம் பத்தனம்திட்டாவில் நேர்ந்த சாலை விபத்தில் (பேருந்து - கார் மோதல்) காரில் பயணித்த புதுமண தம்பதி உள்பட 4 பேர் உயிரிழந்தனர்.
2025ஆம் ஆண்டு தொடக்கத்தில் நடை பெற உள்ள தில்லி சட்டமன்றத் தேர்தலுக்கான 39 வேட்பாளர்கள் அடங்கிய இறுதிப் பட்டியலை ஆம் ஆத்மி கட்சி ஞாயிற் றுக்கிழமை வெளியிட்டது. முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் புதுதில்லி தொகுதியிலும், முதல்வர் அதிஷி கல்காஜி தொகுதியிலும் போட்டி யிடுகின்றனர்.
நாடு முழுவதும் நடைபெற்ற லோக் அதா லத் மூலம் ஒரே நாளில் 1.45 கோடி வழக்கு கள் முடித்து வைக்கப்பட்டன. இதில் ரூ.7 ஆயிரம் கோடி பணபட்டுவாடா நடைபெற்றது என செய்தி கள் வெளியாகியுள்ளன.
அயோத்தி ராமர் கோவிலின் கைவினை ஞர்கள் கவுரவிக்கப்பட்டதாகவும், தாஜ் மகாலைக் கட்டியவர்களின் கைகள் துண்டிக்கப் பட்டதாகவும் உத்தரப்பிரதேச பாஜக முதல்வர் ஆதித்யநாத் சர்ச்சைக் கருத்தை வெளியிட்டுள்ளார்.
மேற்கு வங்க மாநிலம் முர்ஷிதாபாத்தில் பாபர் மசூதி கட்டவிருப்பதாக திரிணா முல் காங்கிரஸ் அறிவித்திருந்த நிலையில், பெர்ஹாம்பூரில் ராமர் கோவில் கட்டுவதாக பாஜக அறிவித்துள்ளது. இதனால், உத்தரபிரதேசத்தில் முடிவுக்கு வந்த அயோத்தி அரசியல், மேற்குவங்க மாநிலத்துக்கு மாறுகிறதா? என்ற கேள்வி எழுந்துள்ளது.