சென்னை, அக். 23 - தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் புதனன்று, சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடை பெற்ற திமுக நிர்வாகி இல்ல திருமண விழாவில் கலந்து கொண்டார். அப்போது, திமுக கூட்டணிக் குள் அதிருப்தி தொடங்கிவிட் டது என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியிருந்த கருத்துக்கு பதிலடி கொடுத்து பேசியதாவது: “மக்களுக்கு நாங்கள் தேர்தலுக்கு முன் தந்த உறுதி மொழிகளை மட்டுமல்லாமல், தராத வாக்குறுதிகளையும், சாத னைகளையும் செய்துவரு கிறோம். ஆனால், மக்களால் ஓரங்கட்டப்பட்ட அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனி சாமி, ‘திமுக கூட்டணி விரை வில் உடையப் போகிறது’ என்று சொல்கிறார். இவ்வளவு நாள் கற்பனையில் பேசியவர், தற் போது ஜோசியராக மாறி உள் ளார். விரக்தியின் எல்லைக்கே அவர் சென்றிருக்கிறார். எங்களுடைய கூட்டணி என்பது, வெறும் தேர்தலுக்காக மட்டும் உருவாக்கப்பட்ட கூட் டணி அல்ல. பதவிக்கு வர வேண்டும் என்பதற்காக உரு வாக்கப்பட்ட கூட்டணி அல்ல. எங்களது கூட்டணி கொள்கைக் கூட்டணி. எங்களுடைய கூட்ட ணிக்குள் விவாதங்கள் நடக்கலாம். பேச்சுவார்த்தைகள் நடக்கலாம். விவாதங்கள் நடப்ப தால், அதில் விரிசல் ஏற்பட்டு விட்டது, என்று யாரும் கருதி விடக் கூடாது. விவாதங்கள் இருக்குமே தவிர விரிசல் ஏற்பட வில்லை. கூட்டணியில் விரிசல் ஏற்படாது. ரொம்ப ஆவலாக காத்துக் கொண்டிருக்கிறார்கள். பக்கத்து வீட்டில் என்ன தகராறு என்று கவனித்துக் கொண்டி ருப்பார்களே, அதுபோல கவனித்துக் கொண்டிருக்கிறார். பழனிசாமிக்கு தன்னுடைய கட்சியை வளர்ப்பதற்கு யோக்கி யதை இல்லை. மக்களிடம் வளர்ந்து நிற்கும் திமுகவையும், அரசையும் பார்த்து ஜோசியம் கூறி வருகிறார் பழனிசாமி.” இவ்வாறு முதல்வர் மு.க. ஸ்டாலின் பதிலடி கொடுத்துள் ளார். அமைச்சர்கள் துரைமுரு கன், கே.என். நேரு, க. பொன் முடி, பி.கே. சேகர்பாபு, ஆவடி நாசர், கயல்விழி செல்வராஜ் உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.