இந்தியாவில் இறப்ப தற்கு உரிய காரணங் களில் காற்று மாசு பாடு 5ஆவது இடத்தில் உள் ளது. காற்றில் இருக்கும் நுண் துகள்களைக் கொண்டே காற்றின் தரம் அளவிடப்படு கிறது. காற்று மாசுபாட்டுக் குறியீட்டில் 2.5 முதல் 10 வரை மைக்ரோ மீட்டர் விட்டம் கொண்ட நுண் துகள்கள் பிஎம் 10 என்று அழைக்கப் படுகின்றன. இவை உட லுக்கு ஓரளவுக்கு பாதிப்பு ஏற்படுத்தக் கூடியவை. 2.5 மைக்ரோ மீட்டர் விட் டம் கொண்ட இந்த நுண்துகள் கள் பிஎம் 2.5 என்று அழைக் கப்படுகின்றன. இந்த பிஎம் 2.5 நுண்துகள்கள்தான் உட லுக்கு மிக தீங்கை விளை விக்கும் தன்மை கொண்டது. இந்தியாவில் இந்த துகள் கள்தான் அதிகம் இருக்கின் றன. இந்த பிஎம் 2.5 நுண்துகள்கள் எக்ஸ்போஸ் ஆவதால் ஏற் படும் பாதிப்பு குறித்து தெற்கு ஆசிய பிராந்தியத்துக்கான கார்டியோ - மெட்டபாலிக் இடர் குறைப்பு அமைப்பின் கண்காணிப்பு அமைப்பு சென்னையில் 6,722 பேரை யும், தில்லியில் இருந்து 5,342 பேரையும் தேர்வு செய்து அவர்களின் ரத்த மாதிரி களை சோதனைக்கு உட் படுத்தியது. இந்த ஆய்வின் முடிவில் காற்று மாசுபாடு காரணமாக டைப்-2 நீரிழிவு நோய் அதி கரிப்புக்கு உள்ளது என தக வல் வெளியாகியுள்ளது. சென்னையில் மேற் கொள்ளப்பட்ட ஆய்வில் உயர் ரத்த அழுத்தம் இருப் போர் காற்று மாசுபாட்டுக்கு அதிகம் தங்களை வெளிப் படுத்திக் கொள்ளும்போது அவர்களுக்கு நீரிழிவு நோயும், குறிப்பாக டைப் 2 நீரிழிவு ஏற்படும் வாய்ப்பு அதிகமாகிறது என்பதும் கண்டறியப்பட்டுள்ளது. தில்லியில் இளைஞர்களும் கூட காற்று மாசுபாட்டால் நீரி ழிவு நோய்க்கு உட்படுவது ஆய்வில் உறுதியாகியுள்ளது.