states

தீக்கதிர் முக்கிய செய்திகள்

வ.உ.சி. துறைமுகத்தை பார்வையிட அனுமதி

தூத்துக்குடி வ.உ.சி. துறை முகத்தை செப்டம்பர் 5-ஆம் தேதி பொதுமக்கள் பார்வையிட அனு மதி அளிக்கப்பட்டுள்ளது. இதன்படி, வ.உ.சி. துறைமுகத்தை பொதுமக்கள் காலை 9 மணி முதல் மாலை 4.30 மணி  வரை பார்வையிடலாம். மேலும் கப்ப லோட்டிய தமிழர் வ.உ.சி.யின் 153-ஆவது பிறந்தநாள் விழா கொண்டாடப் பட உள்ளது.

117 ரவுடிகள் மீது குண்டர்சட்டம் பாய்ந்தது

சென்னை போலீஸ் கமிஷன ராக அருண் பொறுப்பேற்ற பிறகு பல்வேறு குற்றத்தடுப்பு நட வடிக்கைகளை மேற்கொண்டு வரு கிறார். அதன் ஒரு பகுதியாக, கடந்த  இரண்டு மாத காலத்தில் 150 குற்றவாளி கள் கைது செய்யப்பட்டு குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். இவர்களில் 117 பேர் ரவுடிகள் ஆவர். ‘ஏ’ பிளஸ் மற்றும் ‘ஏ’ வகைகளைச் சேர்ந்த 31 குற்றவாளிகளும் 86 சரித்திரப் பதிவேடு குற்றவாளிகளும் அடங்குவர். மேலும் 32 கொலை, கொலை முயற்சி குற்றவாளிகள், கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் சம்பந்தப்பட்ட 33  குற்றவாளிகளும் சிறையில் அடைக்கப் பட்டுள்ளனர்.

மின் நிறுவனங்களுக்கு ஆணை

வீடு, நிலங்களின் மேல் செல்லும் உயர் மின் அழுத்த கேபிள்களை மாற்றி யமைக்கும் செலவை தனி நபர்களை ஏற்க வைக்கக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தனி நபர், அவர்களின் வீடு, நிலங்கள் பாதிக்காத வகையில் உயர் மின் அழுத்த கோபுரம், கேபிள் அமைக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.

சென்னை பல்கலை. பட்டமளிப்பு விழா

சென்னை பல்கலைக்கழகத்தின் 166-வது பட்டமளிப்பு விழா செப்டம்பர் இறுதி வாரத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 50  ஆயிரம் மாணவர்கள் பட்டம் பெறாமல் இருந்த நிலையில் பட்ட மளிப்பு விழா நடைபெற உள்ளது. துணைவேந்தர் இல்லாமலே பட்ட மளிப்பு விழா நடைபெற உள்ளது குறிப் பிடத்தக்கது. மாணவர்கள் ரூ.25 செலுத்தி முனைவர் பட்டம் பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம் என சென்னை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. 

தேவநாதனை சிறையில் அடைக்க உத்தரவு

ரூ.24 கோடி நிதி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட தேவநாதனை செப்டம்பர் 17 வரை சிறையில் அடைக்க பொருளாதார குற்றப்பிரிவு சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக் கப்பட்டுள்ளது. மேலும் வழக்கில் கைதான குணசீலன், மகிமைநாதன் ஆகியோரையும் செப்.17 வரை  சிறையில் அடைக்க உத்தரவிட்டுள் ளது. தி மயிலாப்பூர் இந்து பெர்மனட் ஃபண்ட் நிதி நிறுவனம் முதலீட்டாளர் களிடம் ரூ.24 கோடி மோசடி என புகார் எழுந்துள்ளது.

மருத்துவக் கல்லூரி பெண் பயிற்சி மருத்துவர் தற்கொலை

காஞ்சிபுரம், செப். 3 - மீனாட்சி மருத்துவக் கல்லூரியில் பயின்று வந்த பெண் பயிற்சி மருத்துவர் மாடி யில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். காஞ்சிபுரம் அடுத்த ஏனாத்தூர், காரைப்பேட்டை பகுதியில் மீனாட்சி மருத்துவக் கல்லூரி ஆராய்ச்சி மையம் மற்றும் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவக் கல்லூரியில் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களை சேர்ந்த மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இந்நிலையில், திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை பகுதியைச் சேர்ந்த ஷெர்லின் (23), 5 ஆம் ஆண்டு மருத்துவம் பயின்று வந்த நிலையில், அவர் திடீரென ஞாயிறு இரவு மருத்துவமனையில் 5 வது மாடியின் விளிம்பில் உட்கார்ந்து கொண்டிருந்தார். இதனை, பதற்றத்துடன் எல்லோரும் கவனித்துக் கொண்டிருந்த நேரத்தில் திடீரென குதித்துவிட்டார். கால்கள் மற்றும் தலையின் பின்புறம் பலத்த காயமடைந்த அவரை அதே  மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் ஷெர்லின் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இது குறித்து பொன்னேரிக்கரை காவல்துறையினர் கூறுகையில், “மாணவி ஷெர்லின் ஏற்கெனவே தனிப்பட்ட சொந்த விவகாரத்தில் மன அழுத்தத்திற்கு ஆட்பட்டு  இருந்ததாக தெரிகிறது. அதற்காக வேலூர் சி.எம்.சி மருத்துவமனையில் சிகிச்சை  பெற்று வந்துள்ளார். இதன் தொடர்ச்சியாக அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம். இருப்பினும் தற்கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்பது குறித்தும் தொடர்ந்து விசாரித்து வருகிறோம்” என்றனர்.