states

மீன்வளத்துறை அலுவலகம் முன்பு மார்ச் 2ல் ஆர்ப்பாட்டம்

நாகர்கோவில், பிப்.9- தமிழ்நாடு மீன்பிடி தொழிற்சங்க கூட்ட மைப்பு (சிஐடியு) மாநிலக்குழு கூட்டம்  புதன்கிழமையன்று  நாகர்கோவில் மீனாட்சி புரம் நகைத் தொழிலாளர் பாதுகாப்புப் பேரவை அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்  டத்திற்கு  மாநில தலைவர் ஜி.செலஸ்டின் தலைமை தாங்கினார். அகில இந்திய மீன வர் மற்றும் மீன் தொழிலாளர் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் புல்லுவிளை ஸ்டான்லி கலந்து கொண்டார்.  மீனவர்களின் கோரிக்கைகளை முன் வைத்து ஏப்ரல் 3 தில்லி பேரணியில் திர ளாக பங்கேற்பது, சுருக்குமடி மீன்பிடித்தல் குறித்து உச்சநீதிமன்ற தீர்ப்பை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்துவது, மீனவர் நலவாரிய பிரச்சனைகளுக்காக சென்னை காசிமேடு மீன்வளத்துறை அலுவலகம் முன் மார்ச் 2 அன்று ஆர்ப்பாட்டம் நடத்துவது, கடலில் பேனா நினைவுச்சின்னம் அமைப்பதை மறுபரிசீலனை செய்ய கோரியும்  மீன்பிடி கடன்களுக்கான மீன்பிடி உரிமத்தின் கால அளவு 3 ஆண்டுகள் என்று இருந்ததை ஒரு  ஆண்டாக மாற்றிய ஆணையை ரத்து செய்ய  கோரியும், மீனவர்களுக்கான மானிய மண்  ணெண்ணெய்  டீசல் B, C மற்றும் D பிரி விற்கு உட்பட்ட கலன்களுக்கும் வழங்கிட   கோரியும்  மேலும் தீர்மானங்கள் நிறைவேற்  றப்பட்டன.