மோடி அறிவிப்பதற்கு 25 நாட்களுக்கு முன்பே பணமதிப்பு நீக்கம் தொடர்பான தகவல் சந்திரபாபுவுக்கு தெரிந்துள்ளது. அவருக்கு மட்டும் தெரிந்தது எப்படி? பணமதிப்பு நீக்கம் என்பது முழுக்க முழுக்க ரகசியமாக நடந்ததாக மோடி தொடர்ந்து கூறி வந்தார். ஆனால் உண்மை நிலவரம் இவ்வாறு உள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப், பிரதமர் மோடிக்கு வேண்டுமானால் நல்லவராக இருக்கலாம். ஆனால் இந்திய நாட்டிற்கு டொனால்டு டிரம்ப் நிச்சயமாக நல்லவர் அல்ல. இதை புரிந்து கொள்ள வேண்டும்.
மகாராஷ்டிரா மாநிலத்தின் அடையாளத்தை சிதைத்த பாஜக மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணியின் ஊழல் பேர்வழிகளை எதிர்த்து மராட்டிய மக்களையும், மாநிலத்தையும் காக்க நாங்கள் (இந்தியா - எம்விஏ) போராடிக் கொண்டிருக்கிறோம். இந்த போராட்டத்தில் நிச்சயம் வெற்றி பெறுவோம்.
ஜம்மு-காஷ்மீரில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு பல பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன. ஆனால் ஒரு முக்கியமான பொறுப்பு சட்டம் ஒழுங்கு. பயங்கரவாதம் மற்றும் வன்முறைக்கு எதிரான கொள்கை திட்டத்தை தயாரிக்கும் பொறுப்பு ஜம்மு-காஷ்மீர் அரசுக்கு இல்லை. இப்பொழுது இருப்பது ஜம்மு-காஷ்மீர் சட்டமன்றமே கிடையாது. மீண்டும் மாநில உரிமையை மீட்போம்.