சென்னை, டிச.24- ஒரு பதவிக்கு ஒரு ஓய்வூதியம் என்ற அடிப்படையில் முப்படையில் பணியாற்றுவோருக்கும், முப்படையில் பணியாற்றி ஓய்வுபெற்றவர்களுக்கும் ஒய்வூதிய உயர்வு வழங்க ஒன்றிய அமைச்சரவை முடிவு செய்துள்ளதை போன்று ஒன்றிய அரசு ஊழியர்கள், ஓய்வூதியர்களுக்கான 18 மாத அகவிலைப்படி நிலுவைத்தொகையை வழங்கவேண்டும் என்று தட்சிண ரயில்வே பென்சனர்ஸ் யூனியன் தலைவர் ஆர்.இளங்கோவன் கேட்டுக் கொண்டுள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது : பிரதமர் தலைமையில் வெள்ளிக் கிழமை நடைபெற்ற ஒன்றிய அமைச்ச ரவை கூட்டத்தில் முப்படை பென்ச னர்களுக்கு ஒன் ரேங்க் ஒரு பென்சன் திட்டத்தை முழுமையாக அமல்படுத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது. மூன்று ஆண்டுகளுக்கு அரியஸ் வழங்கவும் முடிவு எடுத்துள்ளது. இதனால் ரூ. 70 ஆயிரம் முதல் ரூ.5 லட்சம் வரை அரியர்ஸ் கிடைக்கும். குடும்ப பென்ச னர்களுக்கு ஒரே தவணையிலும் மற்றவர்களுக்கு நான்கு அரை யாண்டு தவணையிலும் இதனை வழங்க உள்ளது. இதனால் 25 லட்சம் முப்படை பென்சனர்கள் பயனடை வார்கள். இதனால் ஒன்றிய அரசுக்கு ரூ.23 ஆயிரம் கோடி செலவாகும். இதைப்போல 69 லட்சம் ஒன்றிய அரசின் ஓய்வூதியதாரர்களுக்கும் 49 லட்சம் ஒன்றிய அரசு ஊழியர்க ளுக்கும் கொரோனா காலத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட 18 மாத அகவிலை படி பாக்கியை வழங்க கோருகிறோம். இத னால் ஒரு கோடிக்கும் மேற்பட்டோர் பயனடைவார்கள். அத்துடன் நாடாளு மன்ற நிலைக்குழு பரிந்துரைத்த படி ஓய்வூதியத்தில் 65 வயதுக்கு 5விழுக் காடு உயர்வும் 70 வயதுக்கு 10விழுக் காடு உயர்வும் 75 வயதுக்கு 15 விழுக் காடு உயர்வும் அமல்படுத்த வேண்டும். பொருளாதாரம் இப்போது மீண்டுள் ளதாக ஒன்றிய அரசு கூறுகிறது. எனவே முப்படையினர் மற்றும் முப்படை ஓய்வூதியதாரர்களுக்கு எடுத்த முடிவை போல ஒன்றிய அரசு ஊழியர்களுக்கும் ஓய்வூதியதாரர்க ளுக்கும் சாதகமாக முடிவு எடுக்க வேண்டுகிறோம். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.