சென்னை, மே 25- புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி டாஸ்மாக்கில் 1 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு ஊழல்கள் நடந்துள்ளதாக கூறி, அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக ஆளு நரிடம் புகார் அளித்தார். டாஸ்மாக் கொள்முதல் செய்யும் மதுபானங்களில், 60 விழுக்காடு மது பானங்களுக்கு மட்டும் ஆயத்தீர்வை விதிக்கப்படுவதாகவும், 40 விழுக்காடு ஆயத்தீர்வை விதிக்கப்படவில்லை. இதுபோன்ற முறைகேடுகள் நடை பெற்றுள்ளதாக அதில் அவர் கூறி யிருந்தார். இந்த புகாரோடு, சில அவதூறு கருத்துக்களையும் அவரது கட்சியின் இணைய தளத்திலும், டுவிட்டர் பக்கத் திலும் பதிவேற்றம் செய்திருந்தார். இந்த குற்றச்சாட்டு குறித்து பத்திரி கைகளுக்கும் பேட்டி அளித்தார். இவ்வாறு தனக்கு எதிராக அவ தூறு கருத்துக்களை ஆதாரம் இல்லா மல் சுமத்தியுள்ளதாக கிருஷ்ண சாமிக்கு எதிராக சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கை அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்துள்ளார்.அந்த மனுவில், தனது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் அவதூறு கருத்துக்களை தெரிவித்துள்ள கிருஷ்ணசாமியை தண்டிக்க வேண்டும் என்று மனுவில் கூறியுள்ளார்.