states

விவசாயிகளுக்கு கடன் நோட்டீஸ் அனுப்பியது தவறுதான்; நடவடிக்கை எடுக்கமாட்டோம்

சென்னை, ஏப்.20- தரணி சர்க்கரை ஆலை கட்ட வேண்டிய கட னுக்காக விவசாயிகளுக்கு நோட்டீஸ் அனுப்  பிய எஸ்.பி.ஐ வங்கியை கண்டித்து தமிழ்நாடு  கரும்பு விவசாயிகள் சங்கத்தின் சார்பில்  போராட்டம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து விவசாயிகளுக்கு கடன் நோட்டீஸ்  அனுப்பியது தவறுதான் ; அதன் மீது நட வடிக்கை எடுக்கமாட்டோம் என்று வங்கி நிர்வா கம் ஒப்புக்கொண்டுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு கரும்பு விவசாயி கள் சங்கத்தின் மாநிலப் பொதுச்செயலாளர் டி. ரவீந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கை வரு மாறு: திருவண்ணாமலை மாவட்டம் போளூரில்  உள்ள தரணி சர்க்கரை ஆலை 2019 முதல்  மூடப்பட்டுள்ளது. கடந்த நான்கு ஆண்டு களாக சர்க்கரை ஆலை செயல்படவில்லை. போளூர் தரணி சர்க்கரை ஆலை, கரும்பு விவசாயிகளுக்கு 106 கோடி ரூபாய் கரும்பு பண பாக்கி வைத்துள்ளது. ஆலை நிர்வாகம் வங்கிகளில் வாங்கிய ஆயிரம் கோடிக்கும் அதிகமான கடனையும் கட்டாத நிலையில்,  தேசிய கடன் நிறுவன தீர்ப்பாயத்திற்கு என்.சி. எல்.டிக்கு தரணி சர்க்கரை ஆலை சென்று  விட்டது. உயர்நீதிமன்றம் ராஜேந்திரன் அவர் களை என்.சி.எல்.டி தரணி ஆலைக்கான அதி காரியாக நியமித்து ஆலையை ஏலம் விட்டு கடன் பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் பணி கள் நடைபெற்று வருகிறது.

எஸ்.பி.ஐ வங்கி விவசாயிகளுக்கு நோட்டீஸ்

போளூர் தரணி சர்க்கரை ஆலை கரும்பு  விவசாயிகளுக்கு கரும்பு பயிர்கடன் வழங்கிய  போளூர் எஸ்.பி.ஐ வங்கி கிளை, விவசாயி களுக்கு தவணை தவறியதாக கடன் வசூல் செய்திட நோட்டீஸ் அனுப்பினர். கரும்பு விவ சாயிகளை நிர்ப்பந்தித்து கரும்பு பயிர் கட னுக்கு நான்கு வருடத்துக்கான வட்டியை பெற்றுக்கொண்டு 40 விவசாயிகளின் கரும்பு பயிர் கடனை புதுப்பித்துள்ளனர். விவசாயிகள் வங்கிக் கணக்கில் உள்ள பணத்தை அவர்களுக்கே தெரியாமல் எடுத்து  கரும்பு பயிர் கடனுக்கான வட்டிக்கு வரவு வைத்துள்ளனர். விவசாயிகள் எஸ்.பி.ஐ. வங்கியில் பெற்ற  கரும்பு பயிர்க்கடனை தரணி சர்க்கரை ஆலை  விவசாயிகள் அனுப்பிய கரும்பு பயிர் கட னில் பிடித்தம் செய்து கொண்டது. வங்கி களுக்கு தரணி சர்க்கரை ஆலை நிர்வாகம் தான் கரும்பு பயிர்க் கடனை செலுத்த வேண்  டும். கடன் நிலுவை விவகாரம் தேசிய கடன்  நிறுவன தீர்ப்பாயத்தில் உள்ள நிலையில் போளூர் எஸ்.பி.ஐ வங்கி கிளை விவசாயி களுக்கு நோட்டீஸ் அனுப்பி நிர்பந்தப்படுத்தி யது தவறு.  விவசாயிகள் கரும்பு பயிர்க்கடனை புதுப்  பித்தது தவறு, அதை மாற்றி அமைத்திட வேண்டும். விவசாயிகள் வங்கிக்கணக்கில் இருந்து விவசாயிகளுக்கு தெரியாமல் அவர் களது அனுமதி இன்றி பணத்தை எடுத்து கரும்பு பயிர் கடனுக்கு வரவு வைத்தது தவறு.  அந்தப்பணத்தை விவசாயிகளிடம் திரும்ப ஒப்படைத்திட வேண்டும் எனக்கோரி போளூர்  எஸ்.பி.ஐ. வங்கி முன்பு தமிழ்நாடு கரும்பு விவ சாயிகள் சங்கத்தின் சார்பில் தொடர் தர்ணா  போராட்டம் ஏப்ரல்  19 அன்று நடைபெற்றது.

நோட்டீஸ் அனுப்பியது தவறு 

போளூர் வட்டாட்சியர் சகேஷ்பாபு தலை மையில் நடைபெற்ற முத்தரப்பு பேச்சு வார்த்தையில் தரணி சர்க்கரை ஆலை தேசிய  கடன் நிறுவன தீர்ப்பாயத்தில் இருக்கும் நிலை யில் விவசாயிகளிடம் பிடித்தம் செய்த கரும்பு  பயிர் கடனை தரணி சர்க்கரை ஆலை வங்கிக்கு செலுத்த வேண்டிய கடனுக்காக விவசாயி களுக்கு நோட்டீஸ் அனுப்பியது தவறுதான். அனுப்பிய நோட்டீஸ் மீது மேல் நடவடிக்கை எடுக்க மாட்டோம். விவசாயிகள் சங்கம் முன்வைத்துள்ள இதர கோரிக்கைகள் மீது உயர் அதிகாரி களுடன் கலந்து பேசி பத்து நாட்களில் தீர்வு  காணப்படும் என்று எஸ்.பி.ஐ வங்கி அதிகாரி கள் ஒப்புக் கொண்டு எழுத்துப்பூர்வமான உடன்படிக்கை ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது. சங்கத்தின் மாநிலப் பொதுச்செயலாளர் டி. ரவீந்திரன், தலைவர் எஸ்.வேல்மாறன், விவ சாயிகள் சங்க  மாவட்டத் தலைவர் டி.கே.வெங்கடேசன், மாவட்டச் செயலாளர் எஸ்.பல ராமன், பொருளாளர் உதயகுமார், குண்டு ரெட்டியார், ஏ.கே.ராஜேந்திரன், அரிதாசு ஆகிய மாநில நிர்வாகிகள், பாலமுருகன், பாண்டுரங்கன் மற்றும் செல்வம் ஆகியோர் போராட்டத்தில் பங்கேற்றனர்.