states

விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் விஷச் சாராய பலி எண்ணிக்கை 14 ஆக உயர்வு

விழுப்புரம், மே 15- விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் போலியான கள்ளச் சாராயம் குடித்து பலியானவர்கள் எண்ணிக்கை 14ஆக அதிகரித்துள் ளது. இந்த சம்பவம் தமிழ்நாடு முழு வதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது. விழுப்புரம் மாவட்டம் மரக்கா ணத்தை அடுத்த எக்கியார் குப்பத்தில் கள்ளச்சாராயத்தை குடித்ததில் அடுத்தடுத்து சிலர் மயக்கம், வாந்தி உள்ளிட்ட காரணங்களால் விழுப்புரம்  மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டனர். அவர்கள் மேல் சிகிச்சைக் காக ஜிப்மர் மருத்துவமனைக்கு பரிந் துரைக்கப்பட்டு அனுப்பப்பட்டனர். அடுத்தடுத்தது 9 பேர் பலியாகி யுள்ளனர்.இந்த விவகாரம் தொடர்பாக இதுவரை 10 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் விசா ரணை நடைபெற்றுவருகிறது. இந்த நிலையில், செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூர் அருகே பெருங் கருணையில் சின்னத்தம்பி, அவரது மாமியார் வசந்தா மற்றும் பெரும்பாக் கத்தில் வெளியப்பன், அவரது மனைவி சந்திரா ஆகியோர் எரிசாராயம் குடித்து உயிரிழந்தனர். எரிசாராயம் குடித்து உயிருக்கு ஆபத்தான நிலை யில் சிகிச்சை பெற்று வந்த சின்னத் தம்பியின் மனைவி அஞ்சலியும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

ரூ.10 லட்சம்  நிதியுதவி மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் வட்டம், சித்தா மூர் குறுவட்டம், பெருங்கரணை கிரா மத்தை சேர்ந்த வசந்தா, செல்வம், மாரியப்பன், பேரம்பாக்கம் கிரா மத்தைச் சேர்ந்த வள்ளியப்பன் மற்றும் சந்திரா ஆகியோர் கள்ளச்சாராயம் அருந்தியதால் உடல்நலம் பாதிக்கப் பட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்த நிலை யில், சிகிச்சை பலனின்றி உயிரி ழந்தனர் என்ற செய்தியினைக் கேட்டு  வேதனையும், அதிர்ச்சியும் அடைந் தேன். உயிரிழந்தவர்களின் குடும்பத் தினருக்கும் உறவினர்களுக்கும் எனது இரங்கலையும், ஆறுதலையும் தெரி வித்துக்கொள்வதோடு, உயிரிழந் தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சமும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரு பவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன். தற்காலிக பணி நீக்கம் இச்சம்பவம் நடைபெற்ற பகு தியைச் சேர்ந்த மேல்மருவத்தூர் காவல் நிலைய ஆய்வாளர் பிரேம் ஆனந்த், சித்தாமூர் காவல்நிலைய உதவி ஆய்வாளர் மோகனசுந்தரம், மற்றும் மதுராந்தகம் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு உதவி ஆய்வாளர் துரைபாண்டியன் ஆகியோர் தற் காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள் ளனர். இச்சம்பவத்தில் கள்ளச்சாரா யம் விற்பனை செய்த குற்றவாளிகள் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள் ளனர்.” என்று அதில் கூறியுள்ளார்.