states

வன்கொடுமை சட்டத்தில் கைது செய்ய சிபிஎம் வலியுறுத்தல்

சேலம், ஜன.30- சேலம் திருமலைகிரி கோவிலில் நுழைய முற்பட்ட தலித் இளைஞருக்கு கொலை மிரட்டல் விடுத்த ஊராட்சி மன்ற தலை வரை வன்கொடுமை சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சேலம் மாவட்டக்குழு வலியுறுத்தியுள்ளது. சேலம் இரும்பாலை காவல் எல்லைக்கு உட்பட்ட திருமலை கிரியில் தலித் இளைஞன் பிரவீன்குமார் என்பவர் கடந்த 26 ஆம்தேதியன்று இரவு பெரிய மாரியம்மன் கோவில் கருவறை முன்பு நின்று சாமி தரிசனம் செய்ய வேண்டும் என கூறி யுள்ளார். அதற்கு அங்குள்ள சாதி ஆதிக்கசக்திகள் எதிர்ப்பு தெரிவிக்கவே, பிரவீன் குமார் திரும்ப வந்துவிட்டார்.  இதனையடுத்து, திருமலைகிரி ஊராட்சிமன்றத் தலைவ ரும் திமுக பிரமுகருமான மாணிக்கம்  என்பவரிடம் நடை பெற்ற சம்பவம் குறித்து அப்பகுதியினர் தகவல் தெரிவித்துள்ள னர். இதனைத்தொடர்ந்து, ஊராட்சி மன்றத் தலைவர் மாணிக்கம் திருமலைகிரி ஊர் பெரிய மாரியம்மன் கோவில் முன்பு வெள்ளியன்று பஞ்சாயத்தைக் கூட்டி, தலித் இளைஞர் மற்றும் அவரது குடும்பத்தினரை வரவழைத்துள்ளனர்.   அங்கு, ஊராட்சி மன்றத் தலைவர் மாணிக்கம், தலித்  இளைஞன் பிரவீன்குமாரை, அவரது பெற்றோர்கள் மற்றும் மற்றவர்கள் முன்னிலையில் கடுமையாக இழிவான வார்த்தை களால் திட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். சாதி ஆதிக்க வெறியோடு அவர் பேசுகிற வீடியோ வைரலாகி தமிழ கத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. 

சிபிஎம் வலியுறுத்தல்

இந்நிலையில், சம்பவம் நடைபெற்ற இடத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின்  சேலம் மாவட்ட செயலாளர் மேவை.சண்முகராஜா, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஆர்.வெங்கடபதி, பொன்.ரமணி, எம்.குணசேகரன், ஐ.ஞானசௌந்தரி, தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட தலைவர் ஆர்.குழந்தைவேல், சேலம் வடக்கு மாநகர செயலாளர் என். பிரவீன் குமார், சேலம் தாலுகா செய லாளர் கே.எஸ் பழனிசாமி உள்ளிட்ட தலைவர்கள் நேரில் சென்று உண்மையை கேட்டறிந்தனர். இதுகுறித்து சிபிஎம் சேலம் மாவட்டச் செயலாளர் மேவை. சண்முகராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில், “தலித் இளை ஞரை கோவிலுக்குள் அனுமதிக்காமல் சாதிய வன்மத்துடன், அடாவடியாக நடந்து கொண்ட திருமலைகிரி ஊராட்சி மன்ற தலைவர் மாணிக்கத்தை வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும். சம்பந்தப்பட்ட கோவிலில் தலித் மக் களை திரட்டி ஆலயப் பிரவேசம் செய்ய சிபிஎம் சேலம் மாவட்ட குழு நடவடிக்கை மேற்கொள்ளும்’’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

திமுக நடவடிக்கை

இதனிடையே, தலித் இளைஞரை பொதுவெளியில் தகாத வார்த்தையில் பேசி மிரட்டல் விடுத்த திருமலைகிரி ஊராட்சி மன்றத் தலைவரும், திமுக ஒன்றிய செயலாளருமான மாணிக் கத்தை திமுக அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கி அக்கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.