states

பயிர் காப்பீடு: விவசாயிகளுக்கு இன்றோடு காலக்கெடு முடிகிறது

சென்னை, நவ. 14- பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டத்தில்  சம்பா நெல் பயிர் காப்பீடு செய்ய நவ.15  கடைசி நாள் என வேளாண்மை, உழவர் நலத்துறை அறிவுறுத்தியுள்ளது. நடப்பு 2022-2023ஆம் ஆண்டில், பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ்  இதுவரை சம்பா, தாளடி, பிசானம் நெற்பயிரை காப்பீடு செய்யாத பயிர் கடன் பெற்ற விவசாயிகள் தொடக்க வேளாண்மை  கூட்டுறவு கடன் சங்கங்கள் அல்லது தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளிலும், பயிர்க்கடன் பெறாத இதர விவசாயிகள் தங்கள் அருகில் உள்ள பொது சேவை மையங்களில் உரிய ஆவணங்களுடன்  நவம்பர் 15ஆம் தேதிக்குள் காப்பீடு செய்ய வேளாண் மற்றும் உழவர் நலத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது. இதுகுறித்து வேளாண் மற்றும் உழவர் நலத்துறை சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் 2022-2023ஆம் ஆண்டு சம்பா, தாளடி, பிசான பருவ பயிர்களுக்கான காப்பீடு கடந்த செப்டம்பர் 15ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.

இதுவரை 15.95 லட்சம் ஏக்கர் பரப்பளவு சுமார் 11 லட்சம் விவசாயிகளால் காப்பீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், தற்போது, மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும் வடகிழக்கு பருவ தொடங்கி மழை பெய்து வரும் நிலையில்  தஞ்சாகூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர், மதுரை, புதுக்கோட்டை, கரூர், சேலம், திருப்பூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தேனி, ராமநாதபுரம், திருச்சிராப்பள்ளி, அரியலூர், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர். திருவண்ணாமலை, தர்மபுரி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், சிவ கங்கை, கடலூர், திருவள்ளூர் மற்றும் ஈரோடு ஆகிய மாவட்டங்களில் சம்பா, தாளடி, பிசானம் நெற்பயிருக்கான காப்பீடு நவம்பர் 15ஆம் தேதியுடன் முடி வடைவதால், இதுவரை சம்பா, தாளடி, பிசானம் நெற்பயிரை காப்பீடு செய்யாத பயிர் கடன் பெற்ற விவசாயிகள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் அல்லது தேசியமயமாக்கப்பட்ட வங்கி களிலும், பயிர் கடன் பெறாத இதர விவ சாயிகள் தங்கள் அருகில் உள்ள பொது சேவை மையங்களில் உரிய ஆவ ணங்களுடன் நவம்பர் 15ஆம் தேதிக்குள் இந்த திட்டத்தில் பதிவு செய்து பயனடையு மாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.