தஞ்சாவூர், ஏப்.28- தஞ்சை அருகே களிமேடு கிராமத்தில் தேர்பவ னியின் போது நடந்த விபத்தில் உயிரிழந்தவர் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார். தஞ்சாவூருக்கு வியாழனன்று வந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செய லாளர் கே.பாலகிருஷ்ணன், கீழவாசல் பூமால் ராவுத்தர் கோயில் தெரு மற்றும் களிமேடு கிராமத்தில் தேர் ஊர்வலத்தில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த 11 பேரின் வீடுகளுக்கு நேரடியாகச் சென்று, பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். பின்னர், விபத்தில் எரிந்து சாம்பலான தேரை பார்வையிட்டார். இதனைத் தொடர்ந்து தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களைச் சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் அங்கிருந்த மருத்து வர்களிடம், அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை குறித்து கேட்டறிந்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகை யில், ‘‘களிமேடு கிராமத்தில் அப்பர் சதய விழா வையொட்டி நடந்த திருவிழாவின்போது, எதிர் பாராத விதமாக நடந்த மின்சார விபத்தினால், 11 பேர் இறந்த சம்பவம் தமிழகத்தையே சோகத் தில் மூழ்கடித்துள்ளது. கிராமத்தில் அனைத்து மக்களும் இணைந்து, அப்பருக்கு சதய விழா கொண்டாடுவது கடந்த 94 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.
நடந்துள்ள விபத்து மனம் பதைபதைக்க வைக்கிறது. பாதிக்கப்பட்ட மக்களின் துயரத்தை உணர முடிகிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் எங்கள் துயரத்தை பகிர்ந்துகொள் கிறோம். விபத்து நடந்ததும் முதலமைச்சர், உடன டியாக சம்பவ இடத்திற்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சரை அனுப்பி வைத்தார். மேலும் தானும் நேரில் வந்து பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறியுள்ளார். தமிழக அரசு மற்றும் அறநிலையத்துறை, இதுபோன்ற மக்கள் கூடும் திருவிழாக்களில் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை, கண்காணிப்பை முறைப்படுத்த வேண்டும். தமிழகத்தில் ஒவ்வொரு முறையும் திருவிழாக்கள் நடக்கும் போது இதுபோன்ற விபத்துக்கள் நடந்து கொண்டே வருகிறது. எதிர்காலத்தில் நடக்கும் திருவிழாக்களின்போது இதுபோன்ற விபத்துக் களை தவிர்க்க பாதுகாப்பு நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும். அதே நேரத்தில் தமிழக அரசு உயிரிழந்த வர்கள் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கியுள்ளது. இது அந்தக் குடும்பத்திற்கு போதுமானதாக இருக்காது. வருமானத்தை ஈட்டக்கூடிய குடும்பத் தலைவர்கள், இளை ஞர்கள் இறந்துள்ளனர். அத்துடன் பெண்மணி ஒருவர் இந்த விபத்தில் தனது 13 வயது மகனை யும், கடந்த சில மாதங்களுக்கு முன்பு கணவனை யும் இழந்துள்ளார்.
எனவே, குறைந்தபட்சம் ரூ.25 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும். பாதிக்கப்பட்ட குடும் பத்தினருக்கு, வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். தீ விபத்து எதனால் நடந்தது என்பது குறித்து ஆராய ஒரு நபர் விசாரணைக் கமிஷன் அமைக்கப்பட்டுள்ளது. அதன் முடிவு வந்த பிறகுதான் எதனால் விபத்து நடந்தது என்று தெரியவரும். இங்கு பல ஆண்டுகளாக தேர் பவனி நடை பெற்று வந்த நிலையில், இந்த ஆண்டு தான் விபத்து நடைபெற்றுள்ளது. இது எதிர்பாராமல் நடந்த சம்பவம். எனவே, இதில் எதிர்க்கட்சிகள் அரசியல் செய்யக்கூடாது. இதில் அரசியலோ, அரசு தலையீடோ இல்லை. அங்குள்ள மடத்தை கிராம மக்கள், நிதி வசூல் செய்து பராமரித்து வருகின்றனர். இங்கு ள்ள இந்த மடமோ, கோவிலோ இந்து அறநிலை யத் துறைக்கு சொந்தமானது அல்ல. இத்தனை ஆண்டுகாலம் எந்தப் பிரச்சனை யும் இல்லாமல் தான் திருவிழா நடந்துள்ளது.
தற்போது யாரும் எதிர்பாராத விதத்தில் விபத்து நடந்துவிட்டது. எதிர்காலத்தில் இதுபோன்ற விபத்துக்களை தடுக்க வேண்டும். சட்டமன்றத்தில் வெளிநடப்பு செய்வதால் என்ன பயன் உள் ளது? இச்சம்பவத்தில் அரசு துரித நடவடிக்கை எடுத்துள்ளது இதனை வரவேற்கிறோம்’’ இவ்வாறு அவர் கூறினார். அவருடன் திமுக மாவட்ட துணைச் செய லாளர் து.செல்வம், சிபிஎம் மாவட்டச் செய லாளர் சின்னை.பாண்டியன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் கோ.நீலமேகம், ஆர்.மனோகரன், சி.ஜெயபால், என்.வி.கண்ணன், பி.செந்தில்குமார், எஸ்.தமிழ்செல்வி, என்.சிவ குரு, ஆர்.கலைச்செல்வி, ஒன்றியச் செயலாளர் கே.அபிமன்னன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் எம்.மாலதி, என்.குருசாமி, என்.சரவணன், பி.எம். இளங்கோவன், களப்பிரன், இ.வசந்தி, மாநகரச் செயலாளர் வடிவேலன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.