சென்னை, ஜூலை 25- திருத்தணி அருகே மரணமடைந்த பள்ளி மாணவியின் குடும்பத்திற்கு உரிய நிவாரணமும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும் என்று முதலமைச்சருக்கு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் திருவள்ளூர் மாவட்டச் செயலாளர் கோபால் கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அவர் விடுத்திருக்கும் அறிக்கை வருமாறு:- திருவள்ளூர் மாவட்டம் பேரம்பாக்கம் அருகே கீழச்சேரியிலுள்ள அரசு உதவி பெறும் சாக்ரேட் ஹார்ட் மகளிர் மேல் நிலைப் பள்ளி நாடு விடுதலை பெறுவ தற்கு முன்பிலிருந்து செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் ஆதரவற்ற குடும்பங்க ளைச் சேர்ந்த மாணவர்கள் படித்து வருகின்றனர். தற்போது ஆறாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரைக்கும் 1000 த்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகிறார்கள்.
திருத்தணி வட்டம் சூரிய நகரம் ஊராட்சியிலுள்ள தெக்கலூர் ஆதிதிராவிடர் கிராமத்தைச் சேர்ந்த 8 மாணவிகள் கீழச்சேரி பள்ளி விடுதியில் தங்கி பயின்று வருகிறார்கள். இவர்களில் 12 ஆம் வகுப்பு படித்து வந்த பூசனம்-முருகம்மாள் மகள் சரளா தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் வெளியானது. ஆனால், தோட்ட வேலை செய்த போது விஷ பூச்சி கடித்து மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டதாக முதலில் பெற்றோருக்கு தகவல் தெரி வித்துள்ளார்கள். பிறகு தற்கொலை செய்து கொண்டு இறந்துவிட்டதாக கூறியி ருக்கிறார்கள். மாணவியின் மரணம் குறித்து முன்னுக்குப் பின் முரணான தகவல்களை பெற்றோர்களுக்கு தெரிவித்ததால் கோபமடைந்த உறவினர்கள், கிராம மக்கள் சாலைமறியல் போரா ட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து,
காவல்துறை உயர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்த நிலையில் மாவட்ட ஆட்சியர் மட்டும் வரவில்லை. ஏழை மாணவி சரளாவின் மரணம் குறித்து முறையான விசாரணை நடத்த வேண்டும். இறப்பில் சந்தேகம் இருக்கும் எனில் அதற்கு காரணமானவர்கள் மீது உரிய நடவ டிக்கை எடுக்க வேண்டும். சரளாவின் பெற்றோர் ஏழ்மையில் உள்ளதால் உரிய நிவாரணமும் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும். விடுதியில் தங்கி படித்து வரும் மற்ற மாணவிகளை பெற்றோர் களுடன் பாதுகாப்பாக அனுப்பி வைக்க வும், உரிய முறையில் கவுன்சிலிங் கொடுக்க வும் மாவட்ட நிர்வாகம் முன் வர வேண்டும். மாணவிகளுக்கு பாலியல் ரீதியான துன்புறுத்தல் இருந்தாலும், வேறு வகையில் யாராவது மிரட்டினாலும், அச்சுறு த்தினாலும் தேர்வு மதிப்பெண் குறித்து மன அழுத்தம் இருந்தாலும் மாவட்ட குழந்தைகள் நல அலுவலரை உடன டியாக தொடர்பு கொள்வதற்கு கல்வி நிலை யங்கள் மற்றும் அனைத்து விடுதிகளிலும் போன் நம்பர்களை கொடுக்க வேண்டும். குழந்தைகள் நல உரிமை ஆணை யத்தின் கீழ் உள்ள குழுக்கள் முறையாக செயல்படுவதை தமிழக அரசு உத்தரவாதம் செய்ய வேண்டும். இவ்வாறு கோபால் தெரிவித்தி ருக்கிறார்.