2024-25ஆம் ஆண்டின் மோடியின் இடைக்கால பட்ஜெட், ஏழைகளைக் கசக்கிப் பிழிந்து, பணக்காரர்களைக் கொழுக்க வைத்திடும் பட்ஜெட் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கூறியுள்ளது. வியாழக்கிழமை மக்களவையில் சமர்ப்பிக்கப்பட்ட இடைக்காலப் பட்ஜெட் குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு வெளியிட்டுள்ள விமர்சன அறிக்கை: ஒன்றிய நிதி அமைச்சர் மக்களவையில் தாக்கல் செய்துள்ள 2024-25 இடைக்கால பட்ஜெட்டானது இந்தியப் பொருளாதாரம் குறித்து தம்பட்டம் அடித்துள்ளபோதிலும், நாட்டில் உழைக்கும் மக்கள் எதிர்கொள்ளும் மோசமான நிலைமைகளையும், பணக்காரர்களை மேலும் பணக்காரர் களாக்கவும், ஏழைகளை மேலும் ஏழை களாக்கவும் ‘வளர்ச்சி’ என்னும் பெயரில் மேற்கொண்டுள்ள திட்டங்களையும் வெளிப்படுத்துகிறது. 2024-25க்கான உண்மையான பட்ஜெட், 2024 தேர்தலுக்குப்பின் அமையவிருக்கும் புதிய அரசாங்கத்தின் பொறுப்பாக இருக்கும் அதே சமயத்தில், இவர்கள் சமர்ப்பித்துள்ள 2023-24ஆம் ஆண்டுக்கான திருத்தப்பட்ட புள்ளி விவரங்கள் இவர்களின் லட்சணத்தை அம்பலப்படுத்துகின்றன.
குறைக்கப்பட்ட பொதுச்செலவினங்கள்
2023-24ஆம் ஆண்டின் பட்ஜெட் மதிப்பீடுகளைக்காட்டிலும் 13.3 விழுக்காடு சென்ற ஆண்டைக் காட்டி லும் கூடுதலாக வருவாய் வரவுகள் (revenue receipts) வந்திருந்தபோதிலும், நிதிப்பற்றாக் குறையைக் குறைக்கும் விதத்தில் ஒன்றிய அரசின் செலவினங்கள், பட்ஜெட் மதிப்பீட்டைக் காட்டிலும் குறைவாகவே மேற் கொள்ளப்பட்டிருக்கின்றன. இந்த செலவினங்கள், வெறும் 7 விழுக்காடு அளவே அதிகரித்திருக்கிறது. மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP)யின் இயல்பான வளர்ச்சி அதிகாரப்பூர்வமாக 8.9 விழுக்காடு இருந்திடும் என்று எதிர்பார்க்க ப்பட்டுள்ள நிலையில் 7 விழுக்காடு அள விற்குத்தான் செலவினங்கள் அதிகரித்திருக் கின்றன. அரசாங்கத்தின் நிறுவன செல வினங்கள் பட்ஜெட்டில் கூறப்பட்டதைவிட அதிகமாக உள்ள அதே சமயத்தில், பொது செலவினங்களில் இந்தப் பற்றாக்குறை ஏற் பட்டிருக்கிறது. எனவே, நலத்திட்டங்களுக் கான செலவுகள் மற்றும் மூலதனச் செலவுகள் மீது கோடாரி விழுந்துள்ளது. இது எதிர்கால வளர்ச்சி மற்றும் பொருளாதார அடிப்படைகளை எதிர்மறையாக பாதிக்கும்.
ஒதுக்கியதைக் கூட தராத ஒன்றிய அரசு
வேளாண்மை மற்றும் அதனு டன் தொடர்புடைய செயல் பாடுகள், கல்வி, சுகாதாரம், சமூக நலம் மற்றும் பிரதமர் கிருஷி சின்சாய் யோஜனா மற்றும் தலித்துகள், பழங் குடியினர் மற்றும் இதர பிரிவினருக்கான திட்டங்களுக்கும் செய்துள்ள செலவினங் கள் என்பவை பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டதை விட குறைவாகும். பிரதமர் ஆவாஸ் யோஜனா (மலிவு வீட்டுத்திட்டம்), பிரதமர் கிராம சதக் யோஜனா (கிராம சாலைகள் திட்டம்) மற்றும் பிரதமர் போஷன் (ஊட்டச்சத்து திட்டம்) போன்ற வற்றிற்கும் மேற்கொள்ளப்பட்டிருந்த திருத்திய செலவினங்கள், பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டதை விட மிகவும் குறைவாக இருப்பது மட்டுமல்ல, 2022-23இல் செல விட்டதைக்காட்டிலும் குறைவாகும். அதி லும் குறிப்பாக, பெண்கள் மற்றும் குழந்தை கள் தொடர்பான திட்டங்களுக்கான செல வினங்களும் குறைக்கப்பட்டிருப்பதைப் பார்க்கிறோம். 2022-23இல் செலவிட்டதை விட 2023-24இல் செலவிட்ட தொகைகள் குறைந்திருப்பது என்பது உரங்கள் மற்றும் உணவு தானியங்களுக்கான மானியங்கள், மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதிச் சட்டம் மற்றும் நகர்ப்புற வளர்ச்சி ஆகிய தலைப்புகளின் கீழ் இருப்பவைகளாகும். உணவுப் பொருள்களுக்கான மானியங்கள் 2022-23க்கும் 2023-24க்கும் இடையே 60,470 கோடி ரூபாய்கள் வெட்டப்பட்டிருக் கின்றன. இரசாயன உரங்களுக்கான மானியங்கள் 62,445 கோடி ரூபாய்கள் வெட்டப்பட்டிருக்கின்றன. 2023-24இல் மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு சட்டத்தின்கீழ் 4,806 கோடி ரூபாய்தான் செலவு செய்யப்பட்டிருக்கிறது. இது சென்ற ஆண்டைக்காட்டிலும் குறைவான தொகை யாகும்.
கசக்கிப் பிழியப்பட்ட மாநிலங்கள்
கிராமப்புற மேம்பாட்டுச் செலவினங் கள் மற்றும் மாநிலங்களுக்கு மாற்றப் பட்டவை தொடர்பாக நடைமுறை யில் தேக்க நிலை நீடிக்கிறது. இதன் பொருள், உண்மை மதிப்பின் அடிப்படை யில் கணக்கிட்டால் கடும் வெட்டு ஏற்பட்டி ருக்கிறது. மூலதனச் செலவினங்களுக் காகக் கொடுக்கப்பட்ட கடன்கள், ஜிஎஸ்டி இழப்பீட்டிற்குப் பதிலாக முன்பு கொடுக்கப் பட்ட கடனைவிட மிகக் குறைவான தொகை யாக இருப்பதன் காரணமாக மாநிலங்கள் மேலும் கசக்கிப் பிழியப்பட்டிருக்கின்றன.
‘வளர்ச்சி’ என்பது வெற்றுச் சரடு
மிக மோசமான வளர்ச்சியின் பின்னணியில் ஒன்றிய அரசின் செலவினங்களின் சுருக்கமும், வருவாயின் ஒப்பீட்டளவில் ‘மேம்படுதலும்’ நடந்துள்ளன. 2023-24இல் 7.3 விழுக்காடாக உண்மையான வளர்ச்சி இருக்கும் என்று மதிப்பிடப்பட்டிருந்தது முற்றிலும் சரடாகும். 2023-24இல் பணவீக்க விகிதம் 1.6 விழுக்காடாக குறையும் என்று மதிப்பிடப்பட்டதன் அடிப்படையில் இவ்வாறு கூறப்பட்டது. இது நுகர்வோர் விலைக் குறியீட்டின் (Consumer Price Index) அடிப்படையிலான பணவீக்க விகிதங்களுடன் முற்றிலும் முரணாக உள்ளது. உணவுப் பணவீக்கம் 10 விழுக்காடாகவும், மொத்தப் பண வீக்கம் 6 விழுக்காடாகவும் இருக்கும் நிலையில் இது அபத்தமாகும். இந்தியா வில் பணவீக்கம் அதிகமாக இருப்பதன் காரணமாகத்தான் இந்திய ரிசர்வ் வங்கி 2023 பிப்ரவரிக்குப்பின் தன் ரெபோ விகிதத்தை (repo rate) (வங்கிகளுக்கான கையிருப்பு விகிதம்) 6.5 விழுக்காடாக உயர்த்தியிருக்கிறது.
உழைப்புச் சுரண்டல் தீவிரம்
இவ்வாறு மோசமான வளர்ச்சி இருந்த போதிலும், மெதுவாக வளர்ந்து வரும் வருமானத்தை பெருவணி கர்கள், பணக்காரர்கள் மற்றும் செல்வந்தர் களுக்கு ஆதரவாகவே அரசாங்கம் அளித்துள்ளது. கோவிட் காலத்திற்கு முன்பு இருந்த நிலையுடன் ஒப்பிடும்போது கார்ப்பரேட் வரிகள் மூலமும், வருமான வரிகள் மூலமும் வருவாய் அதிகரித்திருக் கிறது. இதற்குக் காரணம் வரி விகிதங்கள் அதிகரித்ததால் அல்ல, மாறாக நாட்டின் மொத்த வருவாயில் பணக்காரர்களின் பங்கு அதிகரித்திருப்பதே காரணமாகும். ‘வளர்ச்சி’ என்ற பெயரில் உழைக்கும் மக்களை அதிக நேரம் வேலை செய்ய வைத்து, ஊதியத்தைக் குறைத்துப் பெற நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கிறார்கள்.
கொழுத்தவர்களுக்கான ‘மாடல்’
மோடியின் பிரச்சார எந்தி ரம், உழைக்கும் மக் களை ‘வளர்ச்சியின் பங்குதாரர்களாக்கி’, ‘உண்மையான சமூக நீதி’ வழங்கியிருப்பதாக தம்பட்டம் அடித்த போதிலும், இடைக்கால பட்ஜெட்டானது அதன் வெறுமையை அம்பலப்படுத்தி இருக்கிறது. விரல்விட்டு எண்ணக்கூடிய ஒருசிலரைக் கொழுக்க வைப்பதற்காக, கொள்ளை லாபம் ஈட்டுவதற்காக, கோடானுகோடி உழைக்கும் மக்களைக் கசக்கிப் பிழியும் மோடி அரசாங்கத்தின் நச்சு ‘வளர்ச்சி மாடலை’யே இந்த இடைக்கால பட்ஜெட் முன்னெடுத்துச் செல்கிறது.