states

தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் : சிபிஎம் கண்டனம்

சென்னை,பிப்.4- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: நாகை மாவட்டம், வேதாரண் யத்தை அடுத்த ஆறுக்காட்டுதுறை யிலிருந்து தமிழக மீனவர்கள் ஐந்து பேர் பிப்ரவரி 2 அன்று  நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது இலங்கை கடற்கொள்ளை யர்கள் நமது நாட்டு எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து  ஆயுதங்களால் தாக்கியுள்ளனர். தமிழக மீனவர்களி டமிருந்த ஜி.பி.எஸ். கருவிகள், செல்போன், கடிகாரம், பிடித்து வைத்திருந்த மீன்கள் ஆகியவற்றை கொள்ளையடித்துக் கொண்டு அடித்து விரட்டியுள்ளனர். காய மடைந்த 5 பேரும் தற்போது மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வரு கின்றனர். இந்த கொலைவெறித் தாக்குதலை மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது. ஏற்கனவே இலங்கை கடற்படை யினர் தமிழக மீனவர்களை சுட்டுக் கொல்வது, கடலில் மூழ்கடிப்பது, அடித்து துன்புறுத்துவது, படகுகளை பறிமுதல் செய்வது, மீன்பிடி சாத னங்களை நாசமாக்குவது போன்ற தொடர் தாக்குதல்களைத் தொடுத்து வருகின்றனர். இதனால் பெரும் துயரங்களையும், அச்சுறுத்தல்களை யும் தமிழக மீனவர்கள் சந்தித்து வரும் நிலையில் தற்போது இலங்கை கடற்கொள்ளையர்களாலும் தாக்கு தலுக்கு உள்ளாகியிருப்பது வேத னைக்குரியது. இதனால் தமிழக மீன வர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படு வதோடு, உயிருக்கும், உடைமைக்கும் உத்தரவாதம் இல்லாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.  தமிழக மீனவர்களை வஞ்சிக்கும் பாஜக அரசு  இந்த தொடர்ச்சியான தாக்கு தலை தடுத்து நிறுத்த வேண்டுமென ஒன்றிய பாஜக அரசை தொடர்ந்து வலியுறுத்தினாலும் தமிழக மீன வர்கள் எக்கேடு கெட்டால் எனக் கென்ன என்று ஒரு சிறுதுரும்பைக் கூட அசைக்க மறுத்து, தமிழக மீனவர்களையும், மக்களையும் வஞ்சித்து வருகிறது. இதுவே இது போன்ற தொடர் தாக்குதலுக்கு  முக்கிய காரணமாக அமைந்துள்ளது. எனவே, ஒன்றிய பாஜக அரசு இனியாவது தமிழ்நாட்டிற்கு விரோத மான போக்கை கைவிட்டு, இது போன்ற தாக்குதல்கள் நடைபெறா மல் இருப்பதற்கும், தமிழக மீனவர்களின் மீன்பிடி உரிமையை நிலைநாட்டுவதற்கும், மீனவர்களின் உயிருக்கும், உடமைகளுக்கும் பாதுகாப்பு அளிக்கவும், இப்பிரச்ச னைக்கு நிரந்தர தீர்வை ஏற்படுத்திட வும் போர்க்கால அடிப்படையில் நட வடிக்கை எடுப்பதுடன், பாதிக்கப் பட்ட மீனவர்களுக்கு உரிய நிவார ணம் வழங்கிடவும் வேண்டும்.