சென்னை, ஏப்.29- கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ் செட்டி வட்டம், கோட்டையூர் கிரா மத்தில் தலித் மக்கள் மீது இதர சாதி யினர் கொடூரமாகத் தாக்கியுள்ளனர். தாக்குதலில் ஈடுபட்ட இதர சாதி யினர்கள் மீது நடவடிக்கை எடுப்ப தற்குப் பதிலாக தாக்குதலுக்கு உள் ளான தலித் மக்கள் மீதே அஞ்செட்டி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதனை கண்டித்தும், தலித் மக்களைத் தாக்கிய இதர சாதி யினர்கள் அனைவரின் மீதும் வழக்குப் பதிவு செய்திட வேண்டுமெனவும், தலித் மக்கள் மீது போடப்பட்டுள்ள வழக்கு களைத் திரும்பப்பெற வலியுறுத்தியும், சட்டத்திற்கு புறம்பாக செயல்பட்ட அஞ் செட்டி காவல்துறையினர் மீது உரிய நட வடிக்கை எடுக்க வலியுறுத்தியும் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் சனிக் கிழமையன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதி யுள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ் செட்டி வட்டம், கோட்டையூர் பஞ்சா யத்து, கோட்டையூர் கிராமத்தில் 70 தலித் குடும்பங்களும், 250க்கும் மேற் பட்ட இதர சாதியைச் சேர்ந்த குடும்பங் களும் வசித்து வருகின்றனர். கடந்த பல ஆண்டுகளாக அங்கு வசிக்கும் தலித் மக்களுக்கு பெரும்பான்மையாக வசிக்கும் இதர சாதியினர் பல்வேறு இன்னல்களையும், தீண்டாமைக் கொடு மைகளையும் கடைப்பிடித்து வரு கின்றனர், குறிப்பாக, டீக்கடையில் இரட்டை டம்ளர் முறை, ஓட்டல்களில் தலித் மக்கள் உள்ளே சென்று சாப்பிட முடியாத நிலை, அங்குள்ள ராமர் கோயில் உள்ளே சென்று வழிபட முடி யாத நிலை, பொது நிகழ்வுகள், நிகழ்ச்சி களில் தலித் மக்களிடம் பணம் வசூல் செய்யாதது, குடும்ப விஷேசங்கள் மற்றும் பொது நிகழ்ச்சிகளில் பேனர் வைக்க முடியாதது உள்ளிட்டு தலித் மக்கள் மீது இதர சாதியினர் நீண்ட கால மாக தீண்டாமைக் கொடுமைகளைக் கடைப்பிடித்து வருகின்றனர். பல முறை அதிகாரிகளுக்கு மனு அளித்த போதும் இக்கொடுமைகள் மீது நட வடிக்கை மேற்கொள்ளப்படவில்லை.
கொடூரத் தாக்குதல்
இந்நிலையில் இம்மாதம் 12, 13 ஆகிய தேதிகளில் கோட்டையூர் அருகே ஜீன்மாநத்தம் கிராமத்தில் நடைபெற்ற திருவிழாவிற்கு தலித் மக்க ளும் சென்றுள்ளனர். அப்போது தலித் வகுப்பைச் சேர்ந்த மரிலிங்கா என்பவர் தலையில் தொப்பி அணிந்து சென்றுள் ளார். அப்போது இதர சாதி வகுப்பைச் சார்ந்த அருண், மோகன் ஆகியோர் மரிலிங்காவை வழிமறித்து கேலி செய்து தொப்பியை எடுத்துள்ளனர். எதற்கு தொப்பியை எடுக்கிறீர்கள் என்ற கேட்ட மரிலிங்காவை அவர்கள் பிளே டால் கையை அறுத்துள்ளனர். அன்று இரவு இதுகுறித்து நியாயம் கேட்கச் சென்றவர்களை சகித்துக் கொள்ள முடியாத இதர சாதியினர் ஒன்று திரண்டு தலித் மக்களை அரிவாள், கம்பு, கத்தி யால் கொடூரமாகத் தாக்கியுள்ளனர். இதில் மரலிங்கா, ரவி, மது, பசம்மா, அபி, கங்காதரன், சிவா, சிவம்மா, விஜயா ஆகியோர் படுகாயமுற்று மருத் துவமனையில் சிகிச்சைப் பெற்று வரு கின்றனர்.
இவ்வளவு பிரச்சனைகளும் அஞ் செட்டி காவல்துறை ஆய்வாளர் முன்பே நடைபெற்றுள்ளது. முன்கூட்டியே தக வல் தெரிந்தும் எந்த முன்னெச்ச ரிக்கை நடவடிக்கையும் எடுக்காமல், கடுமையாகத் தாக்கப்பட்டு வெட்டுக் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் தலித் மக்கள் ஆறு பேர் மீது 307 ஆவது பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளார். இச்சம்ப வத்தில் இரு தரப்பினர் மீதும் அஞ் செட்டி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளதானது தலித் மக்க ளுக்கு இழைக்கப்பட்ட அநீதியாகும். எனவே, தமிழ்நாடு முதலமைச்சர், இப்பிரச்சனையில் உடனடியாக தலை யிட்டு, கோட்டையூர் தலித் மக்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் 50க்கும் மேற்பட்டோர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்திட வேண்டு மெனவும், பாதிக்கப்பட்ட தலித் மக்கள் மீது போடப்பட்டுள்ள வழக்குகளைத் திரும்பப் பெற வேண்டுமெனவும், அவ் வூரில் இதர சாதியினர் கடைப்பிடிக்கும் தீண்டாமைக் கொடுமைகளுக்கு முற் றுப்புள்ளி வைக்க வேண்டுமெனவும், இதர சாதியினருக்கு ஆதரவாக செயல் படும் அஞ்செட்டி காவல்துறையினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டு மெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அந்த கடிதத்தில் அவர் கூறியுள்ளார்.