states

மாநகராட்சி - நகராட்சிகளில் பல்லாயிரக்கணக்கான நிரந்தரப் பணியிடங்களை ஒழிக்கும் அரசாணையை திரும்பப் பெறுக!

சென்னை, நவ.10- மாநகராட்சி - நகராட்சிகளில் பல்லா யிரக்கணக்கான நிரந்தரப் பணியி டங்களை ஒழிக்கும் அரசாணையை திரும்பப் பெற வேண்டுமென தமிழக அரசை மார்க்  சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி யுள்ளது. இதுதொடர்பாக கட்சியின் மாநி லச் செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: தமிழ்நாடு அரசாங்கம் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் குறிப்பிட்ட பணியிடங்களை தனியார்மயப்படுத் தும் அரசாணை ஒன்றை 2022 அக்டோபர் மாதத்தில் பிறப்பித்துள்ளது. அதன்  அடிப்படையில் சென்னை பெருநகரம் தவிர மற்ற நகர்ப்புற உள்ளாட்சிகளில் மக்கள் தொகைக்கு ஏற்ப பணியிடங் களை உருவாக்கும்போது, நிரந்தர பணியிடங்களில் பெரும்பகுதியை நீக்கி அவுட்சோர்சிங் முறையில் நிரப் பிட தெரிவிக்கப்பட்டுள்ளது. 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட மதுரை, கோவை  போன்ற மாநகராட்சிகளில் 301 பணி யிடங்கள் மட்டுமே அனுமதிக்கப்பட் டுள்ளது. இதுபோன்று 20 மாநகராட்சி களிலும் ஆணையாளர் உட்பட மொத்  தம் 3 ஆயிரத்து 147 பணியிடங்கள்தான் இருக்க வேண்டும் என அந்த ஆணை  தெரிவிக்கிறது.

அதிர்ச்சி - வேதனை

உதாரணத்திற்கு திருப்பூர் மாநக ராட்சியில் மொத்தமுள்ள 1539 பணி யிடங்களில் 254 இடங்கள் மட்டுமே  அனுமதிக்கப்பட்டுள்ளது. 1285 பணி யிடங்கள் நீக்கப்பட்டுள்ளன. இது போன்று அனைத்து மாநகராட்சிகளி லும் ஆயிரக்கணக்கான நிரந்தர பணி யிடங்கள் ஒழிக்கப்பட்டுள்ளன. இத னால் ஊழியர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.

மிகவும் ஆபத்து

தூய்மைப்பணி, மேற்பார்வை பணி,  ஓட்டுநர், காவலர், குடிநீர் விநியோக பணியாளர்கள், வரி வசூலிக்கும் அலு வலர், ஆவண எழுத்தாளர், மின் பணி யாளர் உட்பட பல்வேறு பணியிடங் களை  அவுட் சோர்சிங் முறையில் நிரப்  பிட வேண்டும் என்று தெரிவிக்கப்பட் டுள்ளது.  மேற்கண்ட பணியிடங்களில் தற்போது பணியில் இருக்கும் பணியா ளர்கள் ஓய்வு பெற்றவுடன் அந்த பணி யிடங்களை நிரந்தரமாக எடுத்து விடு வது என்று உத்தரவு பிறக்கப்பட்டுள் ளது. இதனால் வாரிசு வேலை என்ற  பேச்சுக்கே இடமில்லாமல் போய்விட் டது. இந்த உத்தரவு மிகவும் ஆபத்தா னதாகும். நிரந்தர பணியிடங்களை ஒழித்து  வெளிமுகமையின் மூலம் ஒப்பந்த  ஊழியர்களை நியமனம் செய்வது தமிழ்  நாட்டில் அமலில் உள்ள 69 சதவீத இட ஒதுக்கீடு என்ற சமுக நீதிக்கோட் பாட்டை நீர்த்துப்போகச் செய்து விடும். நிரந்தரப் பணிகளில் ஒப்பந்தத் தொழி லாளர்களை பணியமர்த்துவது தொழி லாளர் நலன்களை பறித்து விடும்  செயலாகும். சுகாதார ஆய்வாளர் களின் எண்ணிக்கையை குறைப்பது, அரசு வேலைக்காக காத்திருக்கும் இளைஞர்களுக்கு நிரந்தர வேலைக் கான வாய்ப்பு பாதிக்கப்படுவதோடு பொதுமக்களின் சுகாதாரம் என்பது கேள்விக்குறியாகிவிடும்.

மக்களுக்கு விரோதமானது இளைஞர்களுக்கு எதிரானது

பெரும் மக்கள் தொகை கொண்ட  மாநகராட்சிகளில், மக்களுக்கு சேவை களை உறுதி செய்வதற்கு இந்த அறி விப்பு எந்த விதத்திலும் உதவி செய் யாது. இந்த முடிவின் காரணமாக உள்  ளாட்சி அமைப்பில் நிர்வாக கோளாறு கள் ஏற்படுவதுடன், ஒவ்வொருமுறை ஒப்பந்ததாரர் மாற்றப்படும்போதும் பணிகள் தேக்கமடையும். ஊழல் - முறைகேடுகளுக்கு வழிவகுக்கும். உள்ளாட்சி நிர்வாகத்தை லாப/நட்ட நோக்கில் அணுகுவது மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய உதவாது. இது மக்கள் நல னுக்கு நேர் விரோதமானது, இளை ஞர்களுக்கு எதிரானது.

152-ஐ ரத்து செய்க!

நகராட்சிகளில் வார்டு சபைகளை ஏற்படுத்தி பாராட்டத்தக்க முன்முயற்சி களை மேற்கொள்ளும் தமிழ்நாடு அர சாங்கம், மக்களுக்கும், ஊழியர்களுக் கும் விரோதமான  அரசாணை எண்  152-ஐ ரத்து செய்து, உள்ளாட்சி அமைப்புகளில் நிரந்தர பணியிடங் களை பாதுகாக்கவும், மக்கள் தொகை பெருக்கத்தினை கணக்கில் கொண்டு கூடுதலாக நிரந்தர பணியிடங்களை உருவாக்கி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பினை அளித்திடவும், பொது மக்களுக்கு தரமான சேவை வழங்கு வதை உறுதி செய்திடவும்  வேண்டு மென இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மாநில செயற்குழு தமி ழக அரசை வலியுறுத்துகிறது. இந்த அறிக்கையில் கூறப்பட்டுள் ளது.