புதுதில்லி, மே 11- டீன் ஏஜ் காதல்களை நீதிமன்றத் தால் தடுக்க முடியாது என்று கூறியுள்ள தில்லி உயர்நீதிமன்றம், இதுபோன்ற வழக்குகளில் ஜாமீன் வழங்கும்போ தும் அல்லது மறுக்கும் போதும் நீதிமன்றங்கள் கவனமாக இருக்க வேண்டும் எனவும் கூறியுள்ளது. “டீன் ஏஜ் காதல் விவகாரங்களை நீதி மன்றங்களால் தடுக்க முடியாது. திரைப்படங்கள், புதினங்களில் காணும் காதல் உறவுகளைப் பின்பற்ற குழந்தைகள் முயற்சிப்பதைத் தடுப்பது கடினம். அவர்களுக்கு சிறார் சட்டம் பற்றிய புரிதல் குறைவு. இந்தச் சூழ்நிலையில், ஒவ்வொரு வழக்கின் பின்னணியையும் கவனமாக ஆராய்ந்த பிறகே ஜாமீன் மனுக்கள் மீது முடிவு எடுக்கப்பட வேண்டும்” என்று நீதிபதி ஸ்வர்ணகாந்த சர்மா குறிப்பிட்டார். டீன் ஏஜ் உறவுகளால் பல சிறுவர், சிறுமிகள் சிறைகள், பாதுகாப்பு இல்லங்கள் போன்றவற்றில் இருக்கும் நிலை காணப்படுவதாகவும் நீதிபதி சுட்டிக்காட்டினார். சிறுமியின் குடும் பத்தினரின் புகாரின் பேரில் போக்சோ குற்றம் சாட்டப்பட்ட 19 வயது இளை ஞனின் ஜாமீன் மனுவை பரிசீலிக்கும் போது உயர் நீதிமன்றத்தின் குறிப்பிடத்தக்க இந்த நிலைப்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன. டீன் ஏஜ் காதல் விவகாரங்களின் அடிப்படையில் போக்சோ விதித்த நடவடிக்கை குறித்து விவாதிக்கப்பட வேண்டும் என்று தில்லி உயர் நீதிமன்ற நீதிபதி ஜஸ்மீத்சிங் கூறியிருந்தார்.