லக்னோ, அக். 8 - வாராணசி ஞானவாபி மசூதியில் இடம்பெற் றுள்ள சிவலிங்கத்தின் காலத்தைக் கணக்கிடு வதற்கு ‘கார்பன்’ ஆய்வு நடத்தக் கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு தொடர்பாக பதில ளிக்குமாறு மசூதி நிர்வாகத்துக்கு மாவட்ட நீதி மன்றம் உத்தரவிட்டது. ஓர் உயிரினம் காலப்போக்கில் கரிம பொரு ளாக சிதைகிறது. இதன்படி விலங்கினம், தாவரம் மடிந்த பிறகு கரிம விகித மாற்றத்தை வைத்து அவை எந்த காலத்தைச் சேர்ந்தது என்பதை கணக்கிட முடியும். இதுவே ‘கார்பன் டேட்டிங்’ என்றழைக்கப்படுகிறது.
எனினும் பாறை, உலோகங்கள் போன்ற உயி ரற்ற பொருட்களின் வயதை ‘கார்பன் டேட்டிங்’ மூலம் கணிக்க முடியாது. இதன்படி கியான் வாபி சிவலிங்கத்தை நேரடியாக ‘கார்பன் டேட்டிங்’ செய்ய முடியாது. எனினும் சிவ லிங்கத்தை பிரதிஷ்டை செய்தபோது பூஜிக்கப் பட்ட தானியங்கள், மரத்துண்டுகள், உடைகள், கயிறுகள் ஆகியவற்றின் மூலம் ‘கார்பன் டேட்டிங்’ செய்ய முடியும் என்று நிபுணர்கள் தெரி வித்திருந்தனர். அந்த வகையில், ஞானவாபி மசூதியில் நீரைத் தேக்குவதற்காக அமைக்கப்பட்டுள்ள இடத்தில் இருந்த சிவலிங்கத்தின் தொன்மை யைக் கணக்கிடுவதற்கு கார்பன் ஆய்வு முறை யை நடத்த வேண்டும் என்று தில்லியைச் சேர்ந்த இந்துப் பெண்கள் மனுத் தாக்கல் செய்தனர். இந்த மனு வாரணாசி மாவட்ட நீதிமன்றத் தில், நீதிபதி ஏ.கே. விசேஷ் முன்னிலையில் விசார ணைக்கு வந்தது. அப்போது மனுதாரா்கள் தரப்பு வழக்குரைஞா்களின் வாதங்களைக் கேட்ட நீதிபதி, கார்பன் ஆய்வு குறித்த கோரிக்கை மீது பதிலளிக்குமாறு ஞானவாபி மசூதியை நிர் வகித்து வரும் அஞ்சுமன் இந்தேஜமியா மஸ்ஜித் குழுவுக்கு உத்தரவிட்டு, அடுத்த விசாரணையை அக்டோபா் 11-ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள் ளார். உத்தரப் பிரதேசத்தின் வாரணாசியில் காசி விஸ்வநாதா் கோயிலையடுத்து ஞானவாபி மசூதி அமைந்துள்ளது. முகலாய அரசா் ஔரங்கசீப் காலத்தில், கோயிலின் ஒருபகுதியை இடித்துத் தான் இந்த மசூதி கட்டப்பட்டதாக நீண்டகால மாக குற்றச்சாட்டு உள்ளது. இந்நிலையில், இந்த மசூதியின் பக்கவாட்டுச் சுவரிலுள்ள இந்துக் கட வுள்களின் சிலைகளை வழிபடுவதற்கு அனுமதி கோரி, தில்லியைச் சேர்ந்த பெண்கள் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில்தான் தற்போது கார்பன் சோதனை நடத்தும் கோரிக்கை எழுந்துள்ளது.