சென்னை, ஜூலை 21- தமிழ்நாடு முழுவதும் பொறியியல் படிப்புக்கு 2 லட்சத்து 53 ஆயிரத்து 954 பேர் விண்ணப்பித்துள்ளனர். இதில் 2 லட்சத்து 9 ஆயிரத்து 645 பேர் மட்டுமே பதிவு கட்டணம் செலுத்தியிருந்தனர். சான்றிதழ் சரிபார்ப்புக்கு பிறகு, 1 லட்சத்து 99 ஆயிரத்து 868 மாணவர்கள் கவுன்சிலிங்கில் பங்கேற்க தகுதி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அவர் களுக்கான தரவரிசைப் பட்டியல் கடந்த 10 ஆம் தேதி வெளியிடப்பட்டது. அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சிலிங் நடப்பு கல்வியாண்டில் 2 லட்சத்து 32 ஆயிரத்து 376 இடங்களுக்கு அனுமதி அளித்துள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட கல்லூரிகளில் பி.இ. மற்றும் பி.டெக் படிப்புகளுக்கான கவுன்சிலிங் திங்கட்கிழமை (ஜூலை 21) தொடங்கு கிறது. அரசுப் பள்ளி மாணவர்களுக்கான (7.5 சதவீத இடஒதுக்கீடு) கலந்தாய்வு 22 மற்றும் 23 ஆம் தேதிகளில் நடைபெறும். அதை தொடர்ந்து சிறப்பு இட ஒதுக்கீடு பிரிவினருக்கான கலந்தாய்வு 25 ஆம் தேதி முதல் 28 ஆம் தேதி வரை நடை பெறுகிறது. விளையாட்டு வீரர்களுக்கான கலந்தாய்வு மட்டும் நேரடி கலந்தாய்வாக இருக்கும். மற்றவர்களுக்கு வழக்கம் போல் இணைய வழியில் கலந்தாய்வு நடைபெறும். விளையாட்டுப் பிரிவில் 2,112 பேரும், மாற்றுத்திறனாளிகள் பிரிவில் 408 பேரும், முன்னாள் ராணுவத் தினரின் வாரிசுகள் பிரிவில் 1,223 பேரும், சிறப்புப் பிரிவுகளில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு உள் ஒதுக்கீடு பிரிவின் கீழ் 386 பேரும் கலந்தாய்வில் பங்கேற் கின்றனர். பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு வருகிற 29 ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 3 ஆம் தேதி வரை நடைபெறு கிறது. இதைத்தொடர்ந்து, 12 ஆம் வகுப்பு துணைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கான கலந்தாய்வு செப்டம்பர் 6 ஆம் தேதி முதல் 9 ஆம் தேதி வரையும் நடைபெறுகிறது. அதன் தொடர்ச்சியாக தாழ்த்தப் பட்ட மற்றும் அருந்ததியர் பிரிவில் ஏற்படும் காலி இடங்களில் எஸ்.சி. பிரிவு மாண வர்களை சேர்ப்பதற்கான கலந்தாய்வு செப்டம்பர் 10,11 ஆம் தேதிகளில் நடை பெறும். செப்டம்பர் 11 ஆம் தேதி மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு பணிகள் அனைத்தும் முடிக்கப்பட்டு விடும். இந்த கவுன்சிலிங்கில் 441 கல்லூரிகள் பங்கேற்கின்றன.