மதுரை, ஜன.8- “தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அரசு ஊழி யர்கள்-ஆசிரியர்களுக்கான உரிமைகளை வழங்கத் தயார் என்றார். ஆனால், கோரிக்கை கள் நிறைவேற்றப்படாததற்குக் காரணம் அதி கார வர்க்கத்திற்கும்-ஆட்சியாளர்களுக்கும் உள்ள இடைவெளிதான்” காரணம் என ஜாக்டோ -ஜியோ கூறியுள்ளது. ஜாக்டோ-ஜியோ அமைப்பின் உயர்மட்டக் குழுக் கூட்டம்-ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் மதுரையில் ஞாயிறன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து நிர்வாகி கள் மு.அன்பரசு, ச.இ.மயில், பொன்.செல்வராஜ் ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டுமென்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக் கைகளை வலியுறுத்தியும், கடந்த ஆட்சியில் பறிக்கப்பட்ட சலுகைகளை வழங்க வலியுறுத்தி யும் திமுக அரசிடம் தொடர்ந்து முறையிட்டு வரு கிறோம்.
வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற வில்லை. அதிகார வர்க்கத்திற்கும்-ஆட்சியாளர் களுக்கும் உள்ள இடைவெளிதான் இதற்குக் காரணம். கோரிக்கைகளை நிறைவேற்ற வலி யுறுத்தி பிப்ரவரி 12-ஆம் தேதி அனைத்து மாவட்டத் தலைநகரங்களில் போராட்ட ஆயத்த மாநாடு அல்லது வாழ்வாதார கோரிக்கை மாநாடு நடைபெறும். மார்ச் 5-ஆம் தேதி மாவட்டத் தலை நகரங்களில் உண்ணாவிரதம் நடத்தப்படும். மார்ச் 24-ஆம் தேதி மாவட்டத் தலைநகரங்கள், வட்டத் தலைநகர்கள் என 20 ஆயிரம் கிலோ மீட்டர் மனித சங்கிலி இயக்கம் நடைபெறும். தமிழக முதல்வராக கருணாநிதி பொறுப்பு வகித்தபோது, கோரிக்கைகள் தொடர்பாக வாக்கு றுதி அளிப்பார். அந்தக் கோரிக்கைகள் குறித்து வழிகாட்டுதல்களையும் ஆலோசனைகளை மட்டுமே அதிகாரிகளிடம் கேட்டுப் பெறுவார். ஆனால், கோரிக்கைகளை நிறைவேற்றுபவர் அவர் தான். அந்த அடிப்படையில் கோரிக்கை களை நிறைவேற்றக்கூடிய இடத்தில் தமிழக முதல்வர் உள்ளார். அவர்தான் எங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். நிதியமைச்சர் அரசு ஊழியர்கள்-ஆசிரி யர்கள் தொடர்பான கோரிக்கையை கொண்டு சென்றால் நிராகரிக்கிறார். இது தனிநபர் பிரச் சனை அல்ல. கருத்து வேறுபாடு உள்ளதாக வும் நாங்கள் கருதவில்லை. கொள்கை வழி யில் எங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.