states

பழைய கட்டிடங்களை புதிதாக கட்டித்தர பரிசீலனை: மெட்ரோ ரயில் நிர்வாகம்

சென்னை,நவ.18- மெட்ரோ ரயில் சுரங்க வழித்தடம் போக்கில் உள்ள கட்டிடங்களில் கட்டுமானங்களை கண்காணிக்கவும் ஏற்படும் சேதத்தை அளவீடு  செய்யும்  கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன.  சுரங்கம் தோண்டும் போது, மேல் பகுதியில் மாற்றங்கள் ஏற்படா வண்ணம் மேற்பரப்பு கண்காணிக்கும் குழு உறுதி செய்து வருகிறது. கட்டுமானங்கள் மற்றும் மேற்பூச்சு வெடிப்புகளுக்கான கட்டிட ஆய்வுகள் பதிவு செய்யப்பட்டு குடியிருப்போரின் ஒப்புதல் பெறப்படுகின்றன. சுரங்கம் தோண்டும் எந்திரம் அப்பகுதியை கடந்தவுடன் கட்டி டங்களில் வெடிப்புகள் அதிகமானால் முழுமை யாக பழுது பார்க்கப்படும். இது தவிர, சுரங்கம் தோண்டும் போது அப்பகுதியில் உள்ள அனைத்து ஆழ்துளை கிணறுகள் மற்றும் திறந்தவெளி கிணறுகள் தற்காலிக மாகவோ அல்லது நிரந்தரமாக மூடப்படும். நிரந்தரமாக மூடப்பட்ட ஆழ்துளை கிணறுகளுக்கு பதிலாக புதிய ஆழ்துளை கிணறுகள் அமைத்து தர வழிவகை செய்யப்படும். திறந்தவெளி கிணறுகள் மூடப்பட்டால் அவற்றிக்குப் பதிலாக ஆழ்துளை கிணறுகள் அமைத்து தரப்படும். சுரங்கம் தோண்டும் எந்திரம் கடந்து செல்லும் வரையில் ஆழ்துளை கிணறுகள் இருப்பின் தற்காலிகமாக அடைக்கப்படும். அந்த நேரத்தில் குடியிருப்போருக்கு தேவையான தண்ணீர் விநியோகம் செய்யப்படும்.  தங்குவதற்கு பாதுகாப்பில்லை என பட்டியலிடப்பட்ட கட்டிடங்களில் குடியிருப்பவர்கள் சுரங்கம் தோண்டும் பணிகளின் பொது இரண்டு மாதங்களுக்கு மாற்று தங்கும் வசதி செய்வது உறுதி செய்யப்படும். மிகவும் பழமையான கட்டிடம், சுரங்கம் தோண்டிய பின்னரும் பாது காப்பில்லை என உறுதி செய்யப்பட்டால் புதிய கட்டுமானம் குறித்து பரிசீலனை செய்யப்படும். எனவே, சுரங்கப்பாதை அமைக்கும் போது சுரங்கம் தோண்டும் எந்திரம் பயன்படுத்தும் போது பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை என்று சென்னை மெட்ரோ ரயில் நிறுவன திட்ட இயக்குநர் அர்ச்சுனன் கூறியுள்ளார்.