மும்பை, நவ. 18 - பாஜக-வின் பிளவுவாத அரசி யலுக்கு எதிராக, காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி மக்கள் ஒற்றுமைப் பயணம் (பாரத் ஜோடோ யாத்ரா) மேற்கொண்டு வருகிறார். செப்டம்பர் 7-ஆம் தேதி தமிழ்நாட்டின் கன்னியாகுமரியில் இருந்து பயணத்தை துவங்கிய அவர், 150 நாட்களில் 12 மாநி லங்கள், 2 யூனியன் பிரதேசங்கள் வழியாக காஷ்மீர் வரை 3,500 கி.மீ தூரத்திற்கு நடைப்பயணத்தைத் திட்டமிட்டுள்ளார். கடந்த 72 நாட்களில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடக, ஆந்திரா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் நடைப்பய ணம் சென்ற அவர், நவம்பர் 7 முதல் மகாராஷ்டிராவில் பயணத்தைத் தொடர்ந்து வருகிறார். இங்கு சிவசேனா இளம் தலை வர் ஆதித்யா தாக்கரே, தேசியவாத காங்கிரஸ் எம்.பி. சுப்ரியா சுலே உள்ளிட்டோர் ராகுலின் நடைப்பய ணத்தில் கலந்து கொண்டனர். இந்நிலையில், வெள்ளியன்று காலை புல்தானா மாவட்டத்தில் உள்ள ஷேகோவான் என்ற இடத்தை நடைப்பயணம் வந்த டைந்த நிலையில், மகாத்மா காந்தி யின் கொள்ளுப் பேரன் துஷார் காந்தி இந்த பயணத்தில் இணைந் தார்.
இது காங்கிரஸ் தொண்டர் களை மிகுந்த உற்சாகம் அடையச் செய்தது. இதனை, “வரலாற்று நிகழ்வு” என்றும், “காந்தி மற்றும் நேரு குடும்பத்தைச் சேர்ந்த நான்கா வது தலைமுறை இந்திய ஒற்று மைக்காக மீண்டும் இணைந்திருக் கிறது” என்றும் காங்கிரஸ் கட்சி தனது டுவிட்டர் பக்கத்தில் வர்ணித் துள்ளது. மேலும், “மறைந்த மாபெரும் தலைவர்களான ஜவகர்லால் நேரு, மகாத்மா காந்தியின் கொள்ளுப் பேரன்களான துஷார் காந்தி, ராகுல் காந்தி அந்த தலைவர்களின் பாரம்பரியத்தினை முன்னெடுத்துச் செல்கின்றனர். இவர்கள் இரு வரும் ஒன்றிணைந்து நடந்து செல்வது ஆட்சியாளர்களுக்கு ஒரு செய்தியை கடத்துகிறது. அது ஆட்சியாளர்கள் ஜனநாயகத்தை அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கலாம். ஆனால் அவர்களால் அதனை அழிக்க முடியாது என்பதனை உண ர்த்தும்” என்றும் குறிப்பிட்டுள்ளது. முன்னதாக இந்த நடைப்பய ணத்தில் கலந்து கொள்வது குறித்து நவம்பர் 15-ஆம் தேதியே துஷார் காந்தி டுவிட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார்.
அதில், “18-ஆம் தேதி ஷேகான் பகுதியில் நடைபெற இருக்கும் இந்திய ஒற்றுமை யாத்திரையில் நான் கலந்து கொள்ள இருக்கிறேன். ஷேகான் நான் பிறந்த இடம். 1960-ஆம் ஆண்டு ஜனவரி 17 அன்று நாக்பூர் வழியாக செல்லும் 1 டிஎன் ஹவுரா மெயில் ரயிலில் என் அம்மா பயணம் செய்தார். அந்த ரயில் ஷேகான் நிறுத்தத்தில் நின்ற போது நான் பிறந்தேன்” என்று தெரிவித்திருந்தார். மேலும், நவம்பர் 17 அன்று, மற்றொரு பதிவை வெளியிட்ட அவர், ஜவஹர்லால் நேருவும், மகாத்மா காந்தியும் சேர்ந்திருக்கும் புகைப்படம் ஒன்றையும் பகிர்ந்து, “நாளை நான் ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை யாத்திரையில் ஷேவானில் கலந்து கொள்வேன்” என்று தெரிவித்திருந்தார்.