states

ஈஷா மையம் குறித்து உச்சநீதிமன்றத்தில் கோவை எஸ்.பி.சமர்ப்பித்த பதில் அறிக்கை

கோவை, அக்.20 - உயர்நீதிமன்ற உத்தரவின்படி ஈஷா யோகா மையத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் தலைமையில் காவல் துறையினர், மாவட்ட சமூக நலத்துறை, குழந்தைகள் நல குழுவினர் ஆகியோர் அடங்கிய குழுவினர் நேரடியாக விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில் ‘ஈஷா மையம்’ ஏன்  கட்டாயம் விசாரிக்கப்பட வேண்டும்? என்ற உச்சநீதிமன்றத்தின் கேள்விக்கு, கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன், உச்சநீதி மன்றத்தில் சமர்ப்பித்த பதில் அறிக்கை வெளியாகியுள்ளது. அதில், “ஈஷா மையத்திற்கு சென்ற 6 பேர் காணவில்லை மற்றும் மர்ம  முறையில் மரணம் நிகழ்ந்ததாக 7 முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டுள்ளது ( FIR). ஈஷா மையத்திற்குள் சட்டவிரோதமாக ஒரு சுடுகாடு இருக்கிறது என  உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஈஷாவில் பணிபுரியும் மருத்து வர் மீது 12 பழங்குடி பள்ளி மாணவிகளை பாலியல் ரீதியாக துன்புறுத்திய தாக போக்சோ வழக்கு உள்ளது, ஈஷா மையத்தின் மீது பாலியல் குற்றச்சாட்டு வைத்து தில்லி பெண், தில்லி காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. பழங்குடி மக்களின் இடங்கள் ஆக்கிரமிப்பு வழக்கு.,யானை வழிதடத்தில் அனுமதியின்றி ஈஷா மையத்தின் கட்டடங்கள் உள்ளது, மனப்பிறழ்வு(mood swings) பாதிப்படைந்தவர்கள் பலர் ஈஷா மையத்தில் இருக்கின்றனர். 8000 பேர் வசிக்கும் ஈஷா மையத்தில், விசாரிக்க அதிகப்படியான காவலர்கள் தேவை” உள்ளிட்ட தகவல்கள் இடம்பெற்றுள்ளன.