states

ரேசன்கடைகளில் தேங்காய் எண்ணெய்: ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை, ஆக.17- தமிழ்நாட்டில் தேங்காய்க்கு போதிய விலை கிடைப்பதில்லை. இதனால் தென்னை விவசாயி களின் நலன்களை கருத்தில் கொண்டு அனைத்து நியாய விலைக் கடைகளிலும் பாமாயி லுக்கு மாற்றாக தேங்காய் எண்ணெய் வழங்கக் கோரி விடுதலை நாளில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டங்களின் போது நூற்றுக் கணக்கான இடங்களில் தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டிருக்கின்றன. தென்னை விவசாயிகளின் இந்தக் கோரிக்கை மிகவும் நியாயமானது. தமிழ்நாட்டில் கடந்த சில ஆண்டு களாகவே தேங்காய்க்கு போதிய விலை கிடைப்பதில்லை. அதனால், தென்னை விவசாயம் நாளுக்கு நாள் நலிவடைந்து வருகிறது. இந்த  நிலையை மாற்றவும், தேங்காய்க்கு நியாயமான விலை கிடைக்கவும் நியாயவிலைக் கடைகளில் தேங் காய் எண்ணெய் வழங்க வேண்டும் என்று தென்னை விவசாயிகள் நீண்டகாலமாகவே வலியுறுத்தி வருகின்றனர். அந்தக் குரல் தான் இப்போது கிராமசபை தீர்மானமாக எதிரொலித்திருக்கிறது. தமிழ்நாட்டில் மொத்தம் 10.98 லட்சம் ஏக்கரில் தென்னை சாகுபடி செய்யப்படுகிறது. ஆண்டுக்கு 500  கோடிக்கும் கூடுதலான தேங்காய் கள் விளைகின்றன. தேர்ந்தெடுக்கப்பட்ட 6 மாவட்டங்களில் சோதனை அடிப் படையில் நியாயவிலைக் கடைகள் மூலம் தேங்காய் எண்ணெய் வழங்கப்படும் என்று ஒன்றிய அரசு அறிவித்திருக்கிறது. எனவே, ஒன்றிய அரசுடன்  தமிழ்நாடு அரசும் இணைந்து, அனைத்து குடும்ப அட்டைகளுக் கும் மாதம் ஒரு லிட்டர் தேங்காய் எண்ணெய் வழங்கும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலி யுறுத்தியுள்ளார்.