states

தீக்கதிர் முக்கிய செய்திகள்

சத்தீஸ்கர், ஒடிசா, தெற்கு உத்தரப்பிரதேசம், மேற்கு  வங்கம், பீகார், ஜார்க் கண்ட் மற்றும் கடலோர ஆந்திரப் பிரதேச பகுதி யில் அடுத்த 5 நாட் களுக்கு வெப்ப அலைக்கு நிகராக வெயில் கொளுத்தும். மத்திய பிரதேச மாநிலத்தில் கடும் வெயில் சுட்டெரி க்கும் என்பதால் மக்கள் கவனமாக இருக்க இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

பீகாரின் அவுரங்கா பாத்தில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் உணவு உட்கொண்ட 60 பேர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர். இதில் 4  பேரின் நிலை கவலைக் கிடமாக இருப்பதாக மருத்துவமனை தகவல் தெரிவித்துள்ளது.

‘பிங்க் ட்ரைனர்’ என்ற ஹேக்கிங் குழு ஓபன் ஏஐ மூலம் (OpenAI CTO) 1,932 பேரின் கிரிபட்டோ கணக்குகளை ஹேக் செய்து சுமார் 3 மில்லி யன் டாலர் மதிப்பிலான டிஜிட்டல் சொத்துக் களை திருடியுள்ளது.

சூரியகாந்தி விதைகளை குறைந்தபட்ச ஆதரவு விலையில் (எம்எஸ்பி) தொடர்பான ஹரியானா அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவ சாயிகள், ஹரியானா மாநி லம் குருஷேத்ரா மாவட்ட த்தில் டிராக்டர்களுடன் போராட்டம் நடத்தினர். போராட்டத்தால் தில்லி தேசிய நெடுஞ்சாலை யில் போக்குவரத்து கடு மையாக  பாதிக்கப்பட் டது. இந்த விவசாய போ ராட்டத்தில் மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியாவும் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

உலகச் செய்திகள்

எந்தவிதக் கட்டணமும் வசூலிக்காமல் உயர்கல்வியை மாண வர்களுக்கு வழங்க வேண்டும் என்ற தனது கொள்கைக் குறிப்பை ஜப்பான் கம்யூனிஸ்ட் கட்சி வெளியிட்டிருக்கிறது. அக்கட்சியின் கொள்கை ஆணையத்தின் தலைவரான டமுரா டொமோகோ, “முதல் கட்டமாக பயிற்சிக் கட்டணத்தைப் பெரு மளவில் குறைக்க வேண்டும் மற்றும் கல்விக்கடனில் பாதியை அரசு உடனடியாகச் செலுத்த வேண்டும்” என்று தங்கள் முன்மொழிவாக வைப்பதாக செய்தியாளர்களிடம் குறிப்பிட்டார்.

மேற்கு பால்கன் நாடுகளில் ஒன்றான மாண்டிநீக்ரோவில் திடீர் அறிவிப்பாக நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது.  81 நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தேர்வு செய்வதற்கான வாக்குப்பதிவு ஜூன் 11 ஆம் தேதி நடைபெற்றது. ஐரோப்பிய யூனியனுக்கு ஆதரவான ஐரோப்பிய புதிய  இயக்கம் என்ற கட்சி அதிக இடங்களைப் பெறுவதாக தொடக்க கட்ட வாக்கு எண்ணிக்கையில் தெரிய வருகிறது. இருப்பினும் பெரும் பான்மை இடங்கள் கிடைக்காது என்ற நிலைமை உள்ளது.

தைவானுடனான அரசு ரீதியான உறவை முறித்துக் கொண்ட  மத்திய அமெரிக்க நாடுகளில் ஒன்றான ஹோண்டுராஸ், சீனாவில் தனது தூதரகத்தைத் திறந்திருக்கிறது. இந்த அலுவலகத் திறப்பு விழாவில் சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் கின் காங், ஹோண்டுராசின் வெளியுறவுத்துறை அமைச்சர் என்ரிக் ரெய்னா ஆகிய இருவரும் பங்கேற்றனர். ஒரு நிரந்தர இடமும், கூடுதல் ஊழியர்களும் தேவைப்படுகிறார்கள் என்று என்ரிக் தெரிவித்தார்.