சென்னை, ஏப்.8- நிலக்கரி சுரங்க ஏலத்தி லிருந்து தமிழகத்தின் காவிரி டெல்டா பகுதிக்கு விலக்கு அளிப்பதாக ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. காவிரி டெல்டா மாவட் டங்களில் உள்ள கடலூர் மாவட்டம் சேத்தியாத் தோப்பு, அரியலூர் மாவட்டம் மைக்கேல்பட்டி, தஞ்சாவூர் மாவட்டம் வடசேரி ஆகிய இடங்களில் தனியார் நிறு வனம் மூலம் நிலக்கரி சுரங் கம் அமைப்பதற்கான ஏல அறிக்கையை ஒன்றிய அரசு வெளியிட்டது. இது ஒட்டு மொத்த டெல்டா பகுதி மக்க ளுக்கும் விவசாயிகளுக்கும் கடும் அதிர்ச்சியை ஏற் படுத்தியது. திமுக, மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி உள்பட பல் வேறு அரசியல் கட்சித் தலை வர்களும் தமிழ்நாடு அறிவி யல் இயக்கமும் ஒன்றிய அர சின் அறிவிப்புக்கு கண்டனம் தெரிவித்தனர். தமிழகத்தின் நெற்களஞ்சியமான டெல்டா பகுதியை பாலைவனமாக் கும் முயற்சியை ஒன்றிய அரசு கைவிடாவிட்டால் போராட்ட த்தை சந்திக்கவேண்டியிருக் கும் என்றும் எச்சரித்தனர். மேலும் நிலக்கரி சுரங்க ஏல ஒப்பந்த நடைமுறையில் இருந்து காவிரி டெல்டா பகு திகளுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு, முதல் வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதினார். மேலும், டெல்டா பகுதியில் நிலக்கரி சுரங்கம் அமைக்க ஒன்றிய அரசு வெளியிட்ட ஏல அறிவிப்புக்கு எதிராக தமிழக சட்டப்பேர வையில் அனைத்து கட்சி உறுப்பினர்கள் சார்பில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இதற் குப் பதில் அளித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், எந்தக் கார ணத்தைக் கொண்டும் தமி ழக அரசு இதற்கு அனுமதி அளிக்காது” என்று கூறி யிருந்தார்.
மேலும், நிலக்கரி சுரங் கங்கள் அமைக்கும் முயற்சி யை ஒன்றிய அரசு கைவிட வேண்டும் என்றும், இது தொடர்பாக ஒன்றிய அர சுக்கு, தமிழக அரசு அழுத்தம் தர வேண்டும் என்றும் வலி யுறுத்தினார். இந்நிலையில், டெல்டா பகுதிகளில் நிலக் கரி சுரங்கம் அமைக்கும் திட்டம் ரத்து செய்யப்படுவ தாக ஒன்றிய நிலக்கரித் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பிரகலாத் ஜோஷி தனது ட்விட்டர் பக் கத்தில் கடந்த 6 ஆம் தேதி வெளியிட்டுள்ள பதிவில், ’’கூட்டாட்சி தத்துவத்தின் மாண்பைக் காக்கவும், மக் கள் நலனைக் கருத்தில் கொண்டும் நிலக்கரி சுரங்க ஏலத்திலிருந்து அந்த குறிப் பிட்ட 3 சுரங்கங்களை நீக்கு மாறு உத்தரவிட்டுள்ளேன்” என்று கூறியுள்ளார். இந்த ட்வீட்டில் முதல்வர் ஸ்டாலி னையும் அமைச்சர் டேக் செய்துள்ளார்.
மாநில அரசின் அழுத்தத்தால் பின்வாங்கிய ஒன்றிய அரசு
மாநில அரசின் அழுத்தம் காரணமாகவே ஒன்றிய அரசு தமிழகத்தில் 3 இடங்களில் நிலக்கரி எடுக்க விடுத்த ஏலத்தை ரத்து செய்துள்ள தாக மாநில பொதுப்பணித் துறை மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார். விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டா லின் தனது ட்விட்டர் பக்கத் தில், “காவிரி டெல்டாவில் நிலக்கரி சுரங்கம் அமைக்க ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்ற முதல்வ ரின் உறுதியான நிலைப்பாட் டால் ஒன்றிய அரசு அத்திட் டத்தையே கைவிட்டுள்ளது. இது டெல்டாக்காரராக முதல்வருக்கும், தமிழகத் திற்கும் கிடைத்த வெற்றி. விவசாயம் காப்போம்” என்று கூறியுள்ளார்.