states

img

அறிவுப் புரட்சிக்கு புத்தகங்களே ஆயுதம்

சென்னை, ஏப்.23- அறிவுப்புரட்சிக்கு புத்தகங்களே ஆயுதம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். உலக புத்தக  தினத்தை  முன்னிட்டு   தமிழ்நாடு முதல்வர்  தனது சமூக வலை தளப்  பக்கத்தில் வெளியிட் டுள்ள  பதிவில், “நல்ல புத்தகங்கள்  நல்ல தோழன்.  ஒரு புத்தகத்தை  நாம் படிக்கத்  தொடங்கும்போது,  அது  நம்முடன் உரையாடத்  தொடங்கு கிறது.  நாம் அறியாத உலகத்தைக்  காட்டுகிறது. அறிவூட்டுகிறது,   நம்மை பண்படுத்துகிறது என்று குறிப்பிட்டுள்ளார். அதனால்தான், புத்தகங்களைப் பரிமாறிக்கொள்வதை ஓர் இயக்க மாகத் திமுக முன்னெடுப்பதாக  அவர் கூறியுள்ளார். புத்தக வாசிப்பைப் பரவலாக் கும் வகையில், திமுக  அரசு மாவட்டங்கள் தோறும் புத்தகக் காட்சி களை நடத்துவதுடன், நூலகங்க ளுக்கும் புத்துயிர் அளித்துள்ளது என்றும்  அறிவுப் புரட்சிக்கு புத்தகங் களே ஆயுதம்” என்றும் அவர்  பதிவிட்டுள்ளார்.