சென்னை,பிப்.11- திருபெரும்புதூர் முதல் வாலாஜாபேட்டை வரையிலான சாலையில் ஆறு வழிச் சாலைப் பணி களை விரைவுபடுத்த வேண்டும் வலியுறுத்தியும், ஒன்றிய அரசின் திட்டங்களுக்குத் தேவையான ஒத்துழைப்பினை தமிழ்நாடு அரசு வழங்கும் என்று உறுதியளித் தும் ஒன்றிய அரசின் சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ் சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தின் விவரம் வருமாறு:- சென்னையிலிருந்து ராணிப் பேட்டை (என்எச்-4) வரை இருக்கும் சாலையின் நிலையை மேம்படுத்த வேண்டுமென தயாநிதி மாறன் மக்களவையில் கோரிக்கை விடுத்தார். இந்தச் சாலை சென்னை நகரம் மற்றும் அதன் துறைமுகங்களி லிருந்து காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை, ஓசூர் மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய இடங்களில் உள்ள தொழில் நிறுவனங்களுக்கு முக்கிய இணைப்பை வழங்குகிறது. இந்தச் சாலையின் தற்போதைய நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. அதன் காரணமாக, சமீபத்தில் ஒரு சில மாவட்டங்களுக்கு, தான் ரயிலில் செல்ல நேரிட்டது. இந்தச் சாலை தொடர்பான தங்களது மக்களவை உறுப்பினரின் கோரிக்கை முக்கிய மானதாக இருந்தபோதிலும், ஒன்றிய அமைச்சர் அளித்துள்ள பொதுவான மற்றும் உறுதியற்ற பதிலால் தாங்கள் ஏமாற்றமடைந்துள்ளோம்.
தமிழ்நாட்டில், இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் திட்டங்களுக்கு ஆதரவாக மாநில அரசு நடவடிக்கைகள் எடுத்து வருவகி றது. குறிப்பாக, சென்னை துறைமு கம் முதல், மதுரவாயல் வரையிலான உயர்மட்ட விரைவுச் சாலைத் திட்டத்திற்கு, சாத்தியமான எல்லா உதவிகளையும் வழங்குவதன் மூலம் அந்தத் திட்டம் புத்துயிர் பெற்றுள்ளது. கடந்த காலத்தில் வழங்கப்படாத பல்வேறு சலுகைகள் மற்ற பெரிய நெடுஞ்சாலைத் திட்டங்களுக்கும் நீட்டிக்கப்பட்டுள்ளது. நெடுஞ்சாலைத் திட்டங்களுக்காக நிலம் கையகப்படுத்துவதைக் கண் காணிக்க மாநிலத் தலைமையகத்தில் சிறப்புப் பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளது. வனத் துறை அனுமதி பெறப்படுவது தொடர்பாக அவ்வப்போது ஆய்வு செய்யப்படுகிறது. நான் அறிந்தவரை யில், எந்தவொரு பெரிய தேசிய நெடுஞ் சாலைத் திட்டமும் அத்தகைய அனுமதிகளுக்காக நிறுத்தி வைக்கப் படவில்லை. நிலம் கையகப்படுத்துதல் மற்றும் குவாரி மண் எடுக்க அனுமதி வழங்கு தல் போன்றவற்றில் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மேற்கொள்ளும் பணிகளின் முன்னேற்றம் தொடர்பாக தலைமைச் செயலாளர் மட்டத்தில் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. பொருட்களுக்கான விலை, உரிமத் தொகை மற்றும் தீர்வை வரிக் கட்டணத்தை தள்ளுபடி செய்வது, இலவசமாக மண் எடுக்க அனுமதி போன்ற மற்ற கோரிக்கை கள் பரிசீலனையில் உள்ளது.
தமிழ்நாடு அரசு இத்தகைய நேர்மையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் வேளையில், மாநில அரசு, இந்திய தேசிய நெடுஞ் சாலை ஆணையத்துடன் ஒத்துழைக் கவில்லை என்பது போன்ற தோற்றம், ஒன்றிய நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் மக்களவையில் அளித்த பதிலால் ஏற்பட்டுள்ளது துரதிர்ஷ்டவசமானது. அது உண்மையல்ல. மாநில மற்றும் ஒன்றிய அரசுகளால் மேற்கொள்ளப்படும் திட்டங்களுக்கு இடையே பாரபட்சம் காட்டாமல், அனைத்து முக்கிய உள்கட்டமைப்புத் திட்டங்களையும் விரைவுபடுத்த தங்களால் முடிந்த அனைத்தையும் தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வருவகிறது.
மக்களவையில் தயாநிதி மாறன் குறிப்பிட்ட கோரிக்கையைப் பரிசீலிக்க, தேசிய நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளுக்கு உரிய அறி வுரைகளை மத்திய நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் வழங்க வேண்டும். தேசிய நெடுஞ்சாலை-4-ல், ஸ்ரீபெரும் புதூர் முதல் வாலாஜாபேட்டை வரை யிலான சாலையில், ஆறு வழிப் பாதைப் பணி நடைபெற்று வருகிறது. ஒப்பந்ததாரர்களுக்கும், இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத் திற்கும் இடையே ஏற்பட்ட ஒப்பந்தப் பிரச்னையால் பணிகள் கிடப்பில் போடப்பட்டு, தற்போதுள்ள சாலை யின் நிலை மிகவும் மோசமாக உள்ளது. 2020-டிசம்பர் மாதம், சென்னை உயர்நீதிமன்றம், ஸ்ரீபெரும்புதூர் மற்றும் சின்னசமுத்திரம் சுங்கச்சாவடி களில் இதுபோன்ற மோசமான பராமரிப்பு காரணமாக சுங்கச்சாவடி கட்டணத்தை 50 விழுக்காடாகக் குறைத்தது குறிப்பிடத்தக்கது. சாலைகளின் மோசமான நிலைமை, பயணர்கள் எதிர்கொள்ளும் சிரமங்கள் ஆகியவை, சிறப்பாகச் செயல்பட்டுவரும் தேசிய நெடுஞ் சாலை ஆணையத்தின் நற்பெயருக் குக் களங்கத்தை ஏற்படுத்தியுள்ளன. எனவே, இவற்றைக் கருத்தில் கொண்டு, ஸ்ரீபெரும்புதூர் முதல் வாலாஜாபேட்டை வரையிலான சாலையில் (என்எச்-4) ஆறு வழிச் சாலைப் பணிகளை விரைவுபடுத்த வும். சாலைகளை நல்ல நிலையில் பராமரிக்கவும் இந்திய தேசிய நெடுஞ் சாலை ஆணைய அலுவலர்களுக்கு உரிய அறிவுரைகளை வழங்க வேண்டும். ஒன்றிய அரசின் திட்டங்க ளுக்கு தேவையான அனைத்து ஒத்துழைப்பையும் தமிழ்நாடு அரசு தொடர்ந்து வழங்கும். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.