நடிகர் சூர்யாவுக்கு முதலமைச்சர் வாழ்த்து
சென்னை, ஜூன் 29- “தி அகாடமி” விருது தேர்வுக்குழுவில் இடம்பெற்ற நடிகர் சூர்யாவுக்கு முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித் துள்ளார். இதுகுறித்து அவர் சமூக வலை தளங்கள் வாயிலாக வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், தனது தேர்ந்த நடிப் பாற்றலுக்கும்; சமூக அக்கறை கொண்ட கதைத் தேர்வுகளுக்கும் மாபெரும் அங்கீகா ரமாக, ‘தி அகாடமி’ விருது தேர்வுக்குழு வில் இடம்பெற அழைப்பு பெற்ற முதல் தென்னிந்திய நடிகர் என்ற உலகப் பெருமையை அடைந்துள்ள தம்பி சூர்யா வுக்கு எனது பாராட்டுகள் என தெரிவித் துள்ளார்.
தமிழகத்தில் 2 நாள்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு
சென்னை, ஜூன் 29- தமிழகத்தில் 2 நாள்களுக்கு கனம ழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், வியாழக்கிழமை (ஜூன் 30) தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக் கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. ஜூலை 1ஆம் தேதி முதல் 3ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக் கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசா னது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மீனவர்களுக்கான எச்சரிக்கை: வியாழக்கிழமை ஆந்திர கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்க கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். வெள்ளிக்கிழமை குமரிக்கடல் பகுதி, மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய தென் தமிழக கடலோரப் பகுதிகள், தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் பலத்த க்காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ வேகத்தி லும் இடையிடையே 60 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும். வியாழக்கிழமை முதல் சனிக்கிழமை வரை லட்சத்தீவு பகுதி, கர்நாடகா - கேரளா கடலோரப் பகுதிகள், மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு, மத்திய கிழக்கு அரபிக் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடை யிடையே 60 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.