states

3184 காவல்-சீருடை பணியாளர்களுக்கு பொங்கல் பதக்கங்கள்: முதல்வர் அறிவிப்பு

சென்னை,ஜன.14- தமிழ்நாட்டில் 2023 பொங்கல் திருநாளையொட்டி 3184 தமிழக காவல்துறை மற்றும் சீருடை அலுவலர்கள் மற்றும் பணியாளர்க ளுக்கு பொங்கல் பதக்கங்கள் வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தர விட்டுள்ளார். இது குறித்து தமிழ்நாடு அரசு வெளி யிட்டுள்ள செய்தி குறிப்பு வருமாறு:- தமிழ்நாட்டில் காவல், தீய ணைப்பு, சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறைகளில் பணியாற்றும் பணி யாளர்கள் தமது பணியில் வெளிப் படுத்தும் நிகரற்ற செயல்பாட்டை அங்கீ கரித்து ஊக்குவிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் பொங்கலன்று தமிழ்நாடு முதலமைச்சரின் பதக்கங்கள் அறிவிக்கப்பட்டு, வழங்கப்பட்டு வருகின்றன. இந்த ஆண்டு, காவல் துறையில் (ஆண் மற்றும் பெண்) காவலர் நிலை-2, காவலர் நிலை-1, தலைமைக் காவலர், ஹவில்தார் மற்றும் சிறப்பு சார்பு ஆய்வாளர் நிலைகளில் 3000 பணியா ளர்களுக்கு “தமிழ்நாடு முதலமைச்சரின் காவல் பதக்கங்கள்”வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி, 60 நபர்களுக் சிறப்பு பணி ப்பதக்கங்கள் வழங்கப்படு கிறது. பதக்கங்கள் பெறுபவர்களுக்கு நிலை வேறுபாடின்றி மாதாந்திர பதக்கப்படி ரூ.400, 2023 பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் வழங்கப்படும். மேலும், காவல் வானொலி பிரிவு, மோப்ப நாய் படைப் பிரிவு மற்றும் காவல் புகைப்படக் கலைஞர்கள் பிரிவு களில் பணியாற்றும் அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் என ஒவ்வொரு பிரிவிலும் 2 நபர்கள் என ஆக மொத்தம் 6 அதிகாரிகள் மற்றும் அலுவலர்களுக்கு “தமிழ்நாடு முதல மைச்சரின் காவல் தொழில்நுட்ப சிறப்புப் பணிப் பதக்கம்” வழங்கப்படு கிறது. இப்பதக்கங்கள் பெறும் அதி காரிகள் மற்றும் அலுவலர்களுக்கு அவரவர்களின் நிலைகளுக்குத் தக்க வாறு ரொக்க தொகை வழங்கப்படும். இவர்கள் அனைவருக்கும் பின்னர் நடைபெறும் சிறப்பு விழாவில் பதக்கம் முதல்வர் கையொப்பத்துடன் கூடிய பதக்கச்சுருள் வழங்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.