சென்னை, மே 10 - போக்குவரத்துக் கழகத்தில் ஒப்பந்த முறையில் ஓட்டுநர்களை நியமிக்க சிஐடியு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், ஒப்பந்த முறையில் ஓட்டுநர் நடத்துநர்களை நிய மிக்கக் கூடாது என வலியுறுத்தி தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளனம் (சிஐடியு) வேலை நிறுத்த நோட்டீஸ் வழங்கி யது. இதனையடுத்து தொழிலாளர் துறை தனி இணை ஆணையர் வேல்முருகன் முன்னிலையில் சமரச பேச்சுவார்த்தை நடை பெற்றது. இந்த பேச்சுவார்த்தை யின்போது, தொழிலாளர் பணி நிலைமைகளில் எந்த வித மாற்ற மும் (ஸ்டேட்ஸ்கோ) நிர்வாகம் செய்யக் கூடாது என தொழி லாளர் துறை அறிவுறுத்தியது. இதற்கு மாறாக, அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநர்கள் பணியமர்த்தப் பட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொழிலாளர்கள் ஆணையர் அலுவலகம் முன்பு போராட்டங்களை நடத்தினர். இந்த நிலையில் முத்தரப்பு பேச்சுவார்த்தை புதனன்று (மே 10) நடைபெற்றது. இதில் போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குநர்கள் கலந்து கொண்ட னர். அப்போது, நிரந்தர ஊழியர் கள் நியமிக்கப்பட உள்ளனர். ஒப்பந்த முறையில் தற்காலிக மாக ஊழியர்கள் நியமிக்கப்படு கின்றனர் என்று நிர்வாக தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரி வித்த சம்மேளன பொதுச் செயலா ளர் ஆறுமுகநயினார், ஒப்பந்த முறையில் ஊழியர்களை நியமிப் பதை எந்த வகையிலும் ஏற்க முடியாது என்றார். இதனை யடுத்து நிர்வாகம், தொழிலாளர் துறை உத்தரவுப்படி ஸ்டேட்ட ஸ்கோ-வை கடைபிடிப்பதாக மேலாண்மை இயக்குநர்கள் உறுதியளித்தனர். இதனையடுத்து பேச்சுவார்த்தை மே 31ந் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது