நாகர்கோவில், அக்.29- தொழிலாளர் விரோத சட்டங்க ளை நிறைவேற்றி தாக்குதலுக்கு காத்திருக்கும் ஒன்றிய அரசு அகற்றப்பட வேண்டும் என சிஐடியு மாநில பொதுச் செயலாளர் ஜி.சுகு மாறன் தெரிவித்தார். இந்திய தொழிற்சங்க மைய (சிஐடியு) தமிழ்நாடு மாநில 15 ஆவது மாநாடு நவம்பர் 4, 5, 6 தேதிக ளில் கன்னியாகுமரியில் நடைபெற வுள்ளது. அதையொட்டி நாகர்கோ வில் பிரஸ் கிளப்பில் அக்டோபர் 29 (சனிக்கிழமையன்று) நடந்த பத்திரிகையாளர் சந்திப்பின்போது ஜி.சுகுமாறன் கூறியதாவது: இந்திய அரசியலில் சிக்கல் நிறைந்த நேரத்தில் சிஐடியு மாநாடு நடைபெறுகிறது. ஒன்றிய அரசு தொழிலாளர்களின் உரிமைகள் மீதும் தொழிற்சங்கங்கள் மீதும் கடும் தாக்குதல்களை நடத்தி வரு கிறது. தொழிலாளர் சட்டங்கள் 4 தொகுப்புகளாக சுருக்கப்பட்டுள் ளது. தனியார்மயம் மூலம் இந்திய மக்களுக்கு சொந்தமான பொதுத் துறை நிறுவனங்கள் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு மடைமாற்றம் செய்யப்படுகின்றன. 1990 களில் தொடங்கிய தனியார் மயமாக்கல் திட்டத்தின் தொடர்ச்சி யாக ஒன்றிய அரசு, பொதுத்துறை நிறுவனங்களை கண்மூடித்தனமாக தனியாருக்கு விற்பனை செய்து வரு கிறது. புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்காத நிலையில் நிரந்தர தொழிலாளர்களை அகற்றி ஒப்பந்த தொழிலாளர்கள், தினக்கூலி, ஆஷா, அங்கன்வாடி போன்ற திட்டப் பணி யாளர்கள் (ஸ்கீம்) நியமனம் செய்யப் படுகிறார்கள். இவர்களுக்கு தற்போது உள்ள தொழிலாளர் சட்டங்கள் பொருந்தாது என்கிற நிலை ஏற்பட்டுள்ளது.
இவற்றுக்கு எதிராக தொழிலா ளர்கள் நடத்தி வரும் போராட்டங்க ளின் வெற்றியே, 4 தொகுப்புகளாக உருவாக்கிய சட்டங்களை செயல்படுத்த தேவையான விதி முறைகளை உருவாக்க முடியாத சூழல். இதை மேலும் முன்னெ டுத்துச் செல்ல அனைத்து தொழிற் சங்கங்களையும் ஒருங்கிணைத்து வியூகங்களை வகுக்க உள்ளது சிஐடியு மாநாடு. தொழிலாளர்களு க்கு எதிரான ஒன்றிய அரசை அகற்றுவதே மாநாட்டின் முக்கிய நோக்கமாகும். ஒன்றிய அரசு கொண்டுவந்துள்ள மின்சார மசோதாவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளின் கூட்டத்தை தமிழக அரசு நடத்தியிருக்க வேண்டும். நீட் தேர்வுக்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியதுபோல் தீர்மானம் கொண்டுவந்திருக்க வேண்டும். தமிழ்நாடு அரசு 80 சத விகித வாக்குறுதிகளை நிறைவேற்றி யதாக கூறுகிறது. ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியம், திட்டப் பணியா ளர்களை நிரந்தரம் செய்வது போன்ற வாக்குறுதிகள் நிறைவேற்றப் படவில்லை.
குமரி மாவட்டத்தில் இட மெல்லாம் பார்த்த பிறகும் ஈ.எஸ்.ஐ மருத்துவமனை கட்டப்படவில்லை. தற்போதும் தொழிலாளர்கள் திரு நெல்வேலிக்கு சென்று சிகிச்சை பெறும் நிலைதான் நீடிக்கிறது. குமரி மாவட்டத்தின் பாரம்பரியமான தொழில்கள் அழிந்து வருகின்றன. இங்குள்ள இயற்கை வளங்களை பயன்படுத்தி தொழிற்சாலைகளை உருவாக்க வேண்டும். தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுகம் ஆபத்து நிறைந்ததாக விபத்துகளை ஏற்படுத்தி வருகிறது. உயரிழப்புகளை தடுக்க துறை முகத்தின் வடிவமைப்பை பாது காப்பானதாக மாற்றியமைக்க வேண்டும். ரப்பர் தோட்டங்களில் குறிப்பாக அரசு ரப்பர் கழகத்தில் ஏராளமானோருக்கு வேலை கிடைத்து வந்தது. அரசு ரப்பர் தோட் டங்களை விரிவுபடுத்த வேண்டும். முந்திரி தொழிலில் ஏராள மானோர் வேலைவாய்ப்பு பெற்று வந்தனர். அது கொஞ்சம் கொஞ்சமாக அழியும் நிலைக்கு சென்றுகொண்டிருக்கிறது. இந்த தொழிலை பாதுகாக்க மற்ற சில மாநி லங்களில் உள்ளதுபோல் முந்திரி கழகம் உருவாக்கி கச்சா முந்தி ரியை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய வேண்டும். முந்திரி ஏற்றுமதிக்கு மானியம் வழங்கி ஊக்குவிக்க வேண்டும். படித்தவர்கள் அதிகம் உள்ள குமரி மாவட்டத்தில் தகவல் தொழில் நுட்ப (ஐடி) பூங்கா அமைத்து புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்றார். பேட்டியின்போது மாநாட்டு வர வேற்புக்குழு தலைவர் ஜி.செலஸ் டின், செயலாளர் கே.தங்கமோகன், நிர்வாகிகள் கே.பி.பெருமாள், சித்ரா, ஐடா ஹெலன், அகமது உசேன், லட்சுமணன், சுந்தர்ராஜ், மரிய ஸ்டீபன், சந்திர போஸ், கே.மோகன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.