states

நெருக்கடியில் நூற்பாலைகள் ஒன்றிய, மாநில அரசுகள் தலையிட சிஐடியு கோரிக்கை

சென்னை, ஜூலை 20- நூற்பாலைகள் கடும் நெருக்கடியில் உள்ள நிலையில், ஒன்றிய, மாநில அரசுகள் தலையிட சிஐடியு தமிழ்நாடு மாநிலக் குழு கோரிக்கை விடுத்துள்ளது. இதுதொடர்பாக சிஐடியு மாநிலச் செயலாளர் அ.சவுந்தர ராசன், மாநில பொதுச்செயலாளர் ஜி.சுகுமாறன் வெளி யிட்டுள்ள அறிக்கையில்,“தமிழ்நாட்டில் முன்னெப்போதும் இல்லாத அளவில் நூற்பாலைகள் கடும் நெருக்கடியில் உள்ளன. இதனால் கோவை, திருப்பூர், நாமக்கல், இராஜபாளையம் உள்ளிட்ட 29க்கும் மேற்பட்ட மாவட்டங்க ளில் கடும் விளைவுகள் ஏற்படும். பஞ்சு விலை உயர்வு இந்த கடும் பாதிப்பிற்கு மூல காரணமாக உள்ளது. உள்நாட்டில் நமக்குத் தேவையான பருத்தி உற்பத்தி இல்லாத நிலையில் இறக்குமதியை சார்ந்திருக்கிறோம். அந்த இறக்குமதிக்கு ஒன்றிய அரசு தற்போது 11 சதவீத வரி விதித்திருப்பது மிக மோசமான நடவடிக்கை. விளைவுகளை உணராமல் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் செயல் போன்று உள்ளது

மின் கட்டண உயர்வுகளை  ரத்து செய்ய வேண்டும்

தமிழக முதல்வர் விடுத்திருக்கிற வரி ரத்து  கோரிக்கையை ஏற்று ஒன்றிய அரசு உடனடியாக வரியை ரத்து செய்ய வேண்டும். மாநில அரசின் மின் கட்டண உயர்வு நூற்பாலை பின்னலாடை தொழில், ஆயத்த ஆடை தொழில் உள்ளிட்ட ஒட்டுமொத்த ஜவுளி தொழிலை கட்டுபடியாகாத தொழிலாக்கிவிட்டது. மாநில அரசு இந்த மின் கட்டண உயர்வுகளை ரத்து செய்து நிலைக் கட்டணத்தையும் கைவிட வேண்டும். மேலும் வங்கிகளின் குறித்த காலக் கடன் வசூலை இரண்டாண்டுக்கு தள்ளி வைக்க வேண்டும்.  இதுபோன்ற நடவடிக்கைகளை உடனடியாக ஒன்றிய, மாநில அரசுகள் மேற்கொள்ளாவிட்டால் பெரும் தொழில் நலிவும் வேலை இழப்புகளும் ஏற்படும் அபாயம் அச் சுறுத்துகிறது. எனவே சிஐடியு தமிழ்நாடு மாநிலக்குழு ஒன்றிய, மாநில அரசுகளின் போர்க்கால அடிப்படையிலான தலையீட்டை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது” எனக் கூறி யுள்ளனர்.